என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கயத்தில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி
Byமாலை மலர்22 Oct 2017 12:04 PM GMT (Updated: 22 Oct 2017 4:16 PM GMT)
காங்கயத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்திசாமி. இவர் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளியின் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித் குமார் (16). காங்கயம் அருகே உள்ள படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த வாரம் ரஞ்சித் குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு நாள் மட்டும் சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பினார். ஆனால் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.
அதன் பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X