என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரட்டை இலையை பறித்த கட்சிக்கே ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு அளித்து உள்ளது: திண்டுக்கல் லியோனி
Byமாலை மலர்27 Jun 2017 4:34 AM GMT (Updated: 27 Jun 2017 4:34 AM GMT)
இரட்டை இலையை பறித்த கட்சிக்கே ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு அளித்து உள்ளது என நம்பியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில தலைமை கழக பேச்சாளர் ஐ.லியோனி பேசியதாவது:-
கடந்த, 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு 11 முறை டி.விகளிலும் செய்திதாள்களிலும் செங்கோட்டையன் அமைச்சர் ஆவார் என கூறினர். ஆனால் அது இப்போது சசிகலாவின் அடிமையாகி காலில் விழுந்த பிறகுதான் அமைச்சர் ஆகியுள்ளார்.
தன் கட்சியின் தலைவியின் படத்தை கூட ரகசியமாக தான் போட வேண்டி உள்ளது. சசிகலாவின் படத்தை யார் எங்கு பார்த்தாலும் கிழித்து எறிகின்றனர். ஜெயலலிதா பல சொத்துகள் சம்பாதித்தார். ஆனால் அவைகள் அனாதையாக கிடக்கின்றன.
கலைஞர் தான் குடியிருந்த வீட்டை கூட மருத்துவமனைக்காக எழுதி கொடுத்துள்ளார்.
குளித்தலையில் தொடங்கி திருவாரூர் வரை 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக சிறந்த தலைவராக உள்ளார். ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் கலைஞர். தேசிய கட்சிகளுக்கு கூட சின்னங்கள் மாறியுள்ளன. ஆனால் ஒரே சின்னத்தில் உதயசூரியன் சின்னத்தில் கலைஞர் வெற்றி பெற்றுள்ளார். யாரும் படைக்காத சாதனை.
தங்களின் கட்சி சின்னத்தையே பறித்த கட்சிக்கு குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்து உள்ளது அ.தி.மு.க. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் பினாமியாக உள்ளார். வரும் காலத்தில் தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்து தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில தலைமை கழக பேச்சாளர் ஐ.லியோனி பேசியதாவது:-
கடந்த, 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு 11 முறை டி.விகளிலும் செய்திதாள்களிலும் செங்கோட்டையன் அமைச்சர் ஆவார் என கூறினர். ஆனால் அது இப்போது சசிகலாவின் அடிமையாகி காலில் விழுந்த பிறகுதான் அமைச்சர் ஆகியுள்ளார்.
தன் கட்சியின் தலைவியின் படத்தை கூட ரகசியமாக தான் போட வேண்டி உள்ளது. சசிகலாவின் படத்தை யார் எங்கு பார்த்தாலும் கிழித்து எறிகின்றனர். ஜெயலலிதா பல சொத்துகள் சம்பாதித்தார். ஆனால் அவைகள் அனாதையாக கிடக்கின்றன.
கலைஞர் தான் குடியிருந்த வீட்டை கூட மருத்துவமனைக்காக எழுதி கொடுத்துள்ளார்.
குளித்தலையில் தொடங்கி திருவாரூர் வரை 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக சிறந்த தலைவராக உள்ளார். ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் கலைஞர். தேசிய கட்சிகளுக்கு கூட சின்னங்கள் மாறியுள்ளன. ஆனால் ஒரே சின்னத்தில் உதயசூரியன் சின்னத்தில் கலைஞர் வெற்றி பெற்றுள்ளார். யாரும் படைக்காத சாதனை.
தங்களின் கட்சி சின்னத்தையே பறித்த கட்சிக்கு குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்து உள்ளது அ.தி.மு.க. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் பினாமியாக உள்ளார். வரும் காலத்தில் தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்து தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X