search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி தேர்தல்: 9 பேர் வேட்பு மனுத் தாக்கல்
    X

    துணை ஜனாதிபதி தேர்தல்: 9 பேர் வேட்பு மனுத் தாக்கல்

    துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவி காலம் முடிவடைவதையொட்டி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் போட்டியிட இதுவரை 9 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    இதே போல துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந்தேதி முடிவடைகிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ந்தேதி நடக்கிறது.

    துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த நிலையில் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை பாரதிய ஜனதா அடுத்த வாரம் அறிவிக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 9-ந்தேதி நாடு திரும்புகிறார். இதனால் அடுத்த வாரத்தில் பா.ஜனதா வேட்பாளரை அறிவிக்கிறது.



    இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு இதுவரை 9 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நான்கு பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை மற்றும் மேல்-சபை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். பாராளுமன்றத்தின் இரு சபைகளின் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 790 ஆக உள்ளது. இரு சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பா.ஜனதாவுக்கே கூடுதல் எம்.பி.க்கள் பலம் உள்ளது.

    எனவே ஜனாதிபதி தேர்தலை போலவே துணை ஜனாதிபதி தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×