என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலையை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்15 Oct 2017 8:26 AM GMT (Updated: 15 Oct 2017 8:26 AM GMT)
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலையை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை:
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மாநிலத்தின் முதல்வரே படுகொலையை தூண்டி விடும் அளவுக்கு கேரளாவில் நிலைமை இருக்கிறது. பயங்கரவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் பா.ஜனதாவின் முதல் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் இல. கணேசன் எம்.பி., பொது செயலாளர் வானதி சீனிவாசன், அனுசந்திர மவுலி, மண்டல தலைவர்கள் காளிதாஸ், ஜெய்சங்கர், மாவட்ட தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், தனஞ்செயன், கிருஷ்ணகுமார், மற்றும் வேளச்சேரி திருப்புகழ், ரவிச்சந்திரன், ஏ.என்.எஸ். பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மாநிலத்தின் முதல்வரே படுகொலையை தூண்டி விடும் அளவுக்கு கேரளாவில் நிலைமை இருக்கிறது. பயங்கரவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் பா.ஜனதாவின் முதல் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் இல. கணேசன் எம்.பி., பொது செயலாளர் வானதி சீனிவாசன், அனுசந்திர மவுலி, மண்டல தலைவர்கள் காளிதாஸ், ஜெய்சங்கர், மாவட்ட தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், தனஞ்செயன், கிருஷ்ணகுமார், மற்றும் வேளச்சேரி திருப்புகழ், ரவிச்சந்திரன், ஏ.என்.எஸ். பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X