தினமும் ஏ.பி.சி. ஜூஸ் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். ஆப்பிள்,கேரட்டில் வைட்டமின் சி உள்ளது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.
நோய்த்தொற்றுகளுக்கு எதிராக இயற்கையாகவே பாதுகாப்பை உருவாக்கும். இரும்பு மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை பீட்ரூட்டில் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் ஆக்சிஜனின் சுழற்சியை ஊக்குவிக்கவும் பயன்படும்.
நச்சுக்களை நீக்கும்
பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன் நிறமி காரணமாக, ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையான நச்சு நீக்கியாக கருதப்படுகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் நச்சுக்களை நடுநிலையாக்கவும் உதவும்.
ஆப்பிள் , கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் உள்ளன. அதிக பித்த உற்பத்தி மற்றும் எளிதான செரிமானம் மூலம் வளர்சிதை மாற்றக்கழிவுகள் மற்றும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன.
ஏ.பி.சி. ஜூஸை தினமும் பருகுவது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க வழிவகை செய்யும்.
உடல் எடையை சீராக பராமரிக்கும்
குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதாலும், ஊட்டச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க அல்லது சீராக நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற தேர்வாக அமையும்.
சாப்பாட்டுக்கு இடையே நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை தடுக்கும். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும் உதவும்.