search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivratri"

    • உற்சவ மூர்த்தியின் உருவ அமைப்பு வித்தியாசமானது.
    • மணல் குளம் மீது அமர்ந்ததால் விநாயகருக்கு மணக்குள விநாயகர் என்று பெயர்.

    1960-களில் மணக்குள விநாயகர் ஆலய தேவஸ்தான நிர்வாகக் குழுத் தலைவராக அட்வகேட் ராமச்சந்திர ரெட்டியார் இருந்தார். செஞ்சியை அடுத்துள்ள வாத்தியில் இருக்கும் இவரது வயலை விவசாயத்துக்காக உழுத போது அழகான ஸ்படிக லிங்கம் ஒன்று பூமியில் இருந்து கிடைத்தது.

    அந்த ஸ்படிக லிங்கத்தை 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி மணக்குள விநாயகர் கோவிலுக்கு ராமச்சந்திர ரெட்டியார் கொடுத்துவிட்டார். அவருடைய செலவில் அப்போதைய புதுச்சேரி கவர்னராக இருந்த பி.டி. ஜாட்டி முன்னிலையில் அந்த ஸ்படிக லிங்கம் கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

    அன்று முதல் ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த அபிஷேக பூஜையில் பங்கேற்பது சிறப்பானதாக கருதுப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு ஜாம பூஜைகள் இந்த ஸ்படிக லிங்கத்துக்கு நடத்தப்படுகிறது.

    மிகவும் ராசியான உற்சவ மூர்த்தி

    மணக்குள விநாயகர் கோவிலில் இருந்த உற்சவர் சிலை 1950 களில் பழுது பட்டதால் புதிய உற்சவ மூர்த்தியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புதுச்சேரியில் குடை வியாபாரம் செய்து வந்த ரா.மா. கோவிந்தசாமி பிள்ளை ஒரு உற்சவர் சிலையை தயாரித்துக் கொடுத்தார்.

    3.2.1956-ம் அன்று அந்த உற்சவர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த உற்சவருக்கும் மணக்குள விநாயகர் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    உற்சவ நாட்களிலும், முக்கிய நாட்களிலும் இவர்தான் வீதி உலா செல்வார். இந்த உற்சவர் மிக, மிக ராசியான உற்சவராக கருதப்படுகிறார். ஏனெனில் இவர் இந்த ஆலயத்துக்கு வந்த பிறகுதான் மணக்குள விநாயகரை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டதாம்.

    இந்த உற்சவ மூர்த்தியின் உருவ அமைப்பும் வித்தியாசமானது. இவரது கண் புருவம் வில் போன்ற அமைப்புடன் உள்ளது. எந்த ஒரு விநாயகர் சிலையிலும் இத்தகைய வில் புருவத்தை காண இயலாது.

    மேலும் இந்த உற்சவர் திரிபங்க நிலையில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். இதுவும் வித்தியாசமான அமைப்பாக கருதப்படுகிறது.

    கருவறைக்குள் ஊறும் தண்ணீர்

    மணல் குளம் மீது அமர்ந்ததால்தான் விநாயகருக்கு மணக்குள விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இப்போது அந்த குளம் இல்லாவிட்டாலும், அதன் ஒரு சிறு பகுதி கருவறைக்குள் உள்ளது.

    மணல் குளம் இருந்ததற்கு அடையாளமாக, விநாயகரின் கருவறையில் அக்னி மூலை எனும் தென் கிழக்கு மூலையில் ஒரு சிறிய பள்ளம் அமைத்துப் பழைய குளக்கரையின் பெருமை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.

    கருவறை பீடத்தின் மேல் தகட்டை தூக்கினால், அங்கு அந்த சிறிய பள்ளத்தை பார்க்க முடியும். அதனுள் கை விட்டால் குளக்கரையில் மணல் இருப்பது போன்று மணலை உணர முடியும். இந்த பகுதி இருளாக இருக்கும் என்பதால் குருக்கள் சூடம் காட்டும் போது மட்டுமே தெரியும்.

    தினமும் காலை கருவறை வாசலை திறக்கும் போது அந்த பள்ளத்தில் இருந்து குளத்து தண்ணீர்பொங்கி தேங்கி இருக்குமாம். அதை மிகச் சிறந்த தீர்த்தமாக கருதுகிறார்கள்.

    ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகில் காணிப்பாக்கத்தில் உள்ள புகழ் பெற்ற விநாயகர் ஆலயத்திலும் கருவறையில் கிணறு மீது விநாயகர் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். அங்கு விநாயகரை சுற்றி கிணற்று நீர் வந்தபடியே உள்ளது. அதை தீர்த்தமாக கருதுகிறார்கள்.

    அந்த வகையில் மணக்குள விநாயகரும், காணிப்பாக்கம் விநாயகரும் புனித தீர்த்தத்தின் மீது அமர்ந்து ஒரே மாதிரி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.
    • ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும்.

    பிரதோஷ விரத நாட்கள்

    பட்சங்கள் அதாவது மாதத்தில் வளர்பிறை நாட்கள் 15 தேய்பிறை நாட்கள் 15 ஆகும். வளர்பிறைநாட்கள் சுக்கில பட்சம் என்றும் தேய்பிறைநாட்கள் கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படும்.

    இந்த ஒவ்வொரு பட்சத்திலும் திரயோதசி திதி 26 நாழிகைகளுக்கு மேல் 32 நாழிகை வரை வியாபித்திருக்கும் நாளே பிரதோஷ நாள் ஆகும் என்பதை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

    சதுர்த்தசி வியாபித்திருந்தால், கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி தினத்திலும், சுக்கில பட்சத்தில் துவாதசி தினத்திலும் பிரதோஷம் அனுஷ்டிக்க வேண்டும்.

    உதாரணமாக, விஜய வருடம் தை மாதம் 15ம் நாள் (28.01.2014) செவ்வாய் கிழமை துவாதசி திதி அன்று காலை 19 நாழிகை 14 வினாடியுடன் முடிந்து, அதன் பின்னர் திரயோதசி திதி தொடங்கி மறுநாள் காலை புதன் கிழமை 10 நாழிகை 26 வினாடி வரை வியாபித்து இருப்பதால், முதல் நாள் செவ்வாய் கிழமை அன்றுதான் பிரதோஷம் எனக் கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் திரயோதசி திதி 26 நாழிகை முதல் 32 முடிய இருப்பது தை மாதம் 15ம் தேதி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதம்:

    தேய்பிறை சதுர்த்தசி திதி 45 நாழிகை இருக்கும் நாளைத்தான் மாத சிவராத்திரி நாளாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

    மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.

    உதாரணமாக விஜய வருடம் தை மாதம் 16ம் நாள் (29.01.2014) புதன் கிழமை அன்று காலை 10.26 நாழிகையுடன் திரயோதசி திதி முடிவடைந்து அதன் பின்னர் பகல் முழுவதும் சதுர்த்தசி திதி இருப்பதால் அன்றுதான் மாத சிவராத்திரி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    கார்த்திகை தீப நிர்ணயம் செய்வது:

    கார்த்திகை மாதம் பௌர்ணமி திதி பிரதானமாகும். இந்த பௌர்ணமி , பிரதோஷ காலத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

    பாஞ்சராத்திர தீபம்:

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரதானமாகும். இந்த நட்சத்திரத்திற்கு பரணி நட்சத்திரம் வேதையாகக் கூடாது. அதாவது பரணி நட்சத்திரம் சூரிய உதயத்பரம் ஒரு வினாடியும் இருக்கக்கூடாது. இப்படி வேதை ஏற்பட்டால் மறுதினத்தில்தான் தீபரோகணம்.

    கோகுலாஷ்டமி:

    சிரவண (ஆவணி மாதம்) -பகுள அஷ்டமி - இந்த அஷ்டமி அர்த்தராத்திரியில் வியாபித்திருக்கும் தினம்தான் கோகுலாஷ்டமி.

    கிருஷ்ண ஜெயந்தி பகுள அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும், ஹர்ஷநாம யோகமும், ரிஷப லக்னமும் சேர்ந்த நேரம்தான் கிருஷண் ஜெயந்தி ஆகும்.

    தீபாவளி நிர்ணயம்:

    ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும். இந்த சதுர்த்தசி திதி இரவு 4-வது ஜாமத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி.

    போதாயன அமாவாசை நிர்ணயம்:

    சதுர்த்தசி திதியன்று 4வது ஜாமத்தில் அமாவாசை தொடர்பு சிறிது நேரம் இருந்தாலும் அந்த நாள் போதாயன அமாவாசை நாளாகும்.

    முகூர்த்த நாள் குறிக்கும்போது கவனிக்க வேண்டிய முகூர்த்த தோஷங்கள்:

    பூகம்பம் ஏற்பட்ட மாதம் தவிர்க்க வேண்டும்.

    மல மாதம் (இரண்டு பௌர்ணமி, இரண்டுஅமாவாசை வரும் மாதம்) தவிர்க்க வேண்டும்.

    கிரகண தோஷம் உடைய மாதங்கள், சந்திரன் 8,12 ஆகிய இடங்களில் இருக்கும் நாட்கள், பாபகிரகம் ஆட்சியற்று மற்ற ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலம், குருவும் சுக்கிரனும் சமசப்தம லக்கினங்களில் சஞ்சாரம் செய்யும் காலம், குரு சுக்கிரன் அஸ்தமன தினத்திற்கு முன், பின் 7 நாட்கள், குரு, சுக்கிரன் லக்கினமானபோது முன், பின் 3 நாட்கள், சாயன்ன காலம் (24 முதல் 30 நாழிகை வரை) அன்றைய தினம் சூரிய உதயம் 6 மணி என்று எடுத்துக்கொண்டால், அந்த 6 மணியை கூட்டிகொள்ளக் கிடைப்பது 15.36 மணி முதல் 18.00 மணி வரை, கரணங்களில் பவம், பாலவம், கரசை, பத்திரை நீக்கிய கரணங்கள், இஷ்டி தோஷம், இருத்தை, அஷ்டமி, இலாபம், ஏற்காளம், யோகங்களில் வைத்திருதி யோகம்,வியாதிபாத யோக பிற்பாதி ஆகுலம் முதலானவை முகூர்த்த தோஷம் உள்ளவையாகும். இவை முகூர்த்தம் குறிக்கும் போது தவிர்க்கப்படவேண்டிய காலங்கள் ஆகும்.

    சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது) காலம் நிர்ணயம் செய்வது எப்படி?

    ஒரு திதியானது அபரான்னம் காலத்திற்கு (18 முதல் 24 நாழிகை) மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.

    ஒரு திதியானது மத்தியான்னம் முதல் அபரான்னம் வரை வியாபித்திருக்குமேயானால், பகல் அகசை (அகசு என்பது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என்பது சில மாதங்களில் பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இப்படி மாறியும் இருப்பதால் வரும் கால வித்தியாசம் எனப்படும். இதை பஞ்சாங்கத்தில் அகசு நாழிகை என்று குறித்திருப்பார்கள்) பிராத - ஸங்கல - மத்தியான்ன - அபரான்ன - சாயன்ன என ஐந்து கூறுகள் செய்து அபரான்ன காலத்தில் அதிகம் வியாபித்திருக்கின்ற தினத்தில் திதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஒரு திதியானது சாயன்னத்தில் தொடங்கி மறுநாள் மத்தியான்ன காலத்தில் முடிந்து விட்டால், மறுநாள் குதப கால ஆரம்பமாகிய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் இந்த திதியின் சிரார்த்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒரு திதியானது மாத ஆரம்பம் மற்றும் மாத முடிவில் ஆக இரண்டு தடவை வந்தால், பிந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தின திதியில் சங்கராந்தி கிரகண தோஷங்கள் ஏற்பட்டால் முந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தினது அதிகத் திதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சங்கராந்தி தோஷம் என்பது பகல் 12 நாழிகைக்கு மேலும் இரவு 15 நாழிகை வரையிலும் இருக்கும்.

    ஒரு திதியானது ஒருமாதத்தில் ஒரு தடவை வந்து அந்த திதியானது அன்று அபரான்ன காலம் வரை வியாபித்திராத போது, அன்றைய திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. பூர்வமாத (முந்தைய மாத) திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனுஷ்டிப்பதில் முன் மாதத்தின் குதப கால தொடர்பு இருக்க வேண்டும். அதாவது குதப கால ஆரம்பமாகியய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் தொடர்பு இருக்க வேண்டும். சங்கரம தோஷமும் இருக்கக் கூடாது. மேற்கண்டவாறு முந்தின மாத திதி அமையவில்லையெனில் அந்த மாதத் திதியையே அனுஷடிக்கலாம்.

    ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்து இரண்டிற்கும் சங்கராநதி தோஷம் ஏற்பட்டிருந்தால் அதற்கு அடுத்த மாதம் வரும் திதியே சிலாக்கியமாகும்.

    திதித்துவம்:

    மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு ஒரே நாளில் இரண்டு திதிகளையும் அனுஷ்டிக்க நேரிட்டால் அதற்கு திதித்துவம் என்று பெயர்.

    சூனிய திதி என்றால் என்ன?

    ஏதாவது ஒரு திதி அன்றைய தினத்தில் இருந்தும், அது அபரான்ன காலத்தில் அதிககாலம் இல்லாமல் குறைவாக இருப்பதனால் அந்த திதி மறுதினத்தில் சேர்ந்து, அதற்கு முந்தின திதி முந்திய தினத்தில் செல்லாகி விட்டால் அன்றைய தினம் சூனிய திதி என்று சொல்லப்படும்.

    • சனிப்பிரதோஷ முதல் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டும்.
    • 6 நாட்கள் சுப்பிரமணியரை நினைத்து அனுஷ்டிப்பது கந்தசஷ்டி விரதம்.

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத முதல் சோமவாரம் தொடங்கி சோமவாரம்தோறும் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் ஒரு பொழுது போசனஞ் செய்யக் கடவர். அதுவும் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர்.

    இவ்விரதம் வாழ்நாள் முழுவதும், பன்னிரண்டு வருஷகாலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும் அனுட்டித்தல் வேண்டும். பன்னிரெண்டு மாதத்திலும் அனுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாதத்தில் மாத்திரமேனும் அனுட்டிக்கக் கடவர். (உபவாசம் -உணவின்றியிருத்தல்.)

    திருவாதிரை விரதம்

    மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் செய்தல் வேண்டும். இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம்.

    உமாமகேஸ்வர விரதம்

    கார்த்திகை மாதத்து பௌர்ணமியிலே உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர். இரவிலே பணிகாரம் பழம் உட்கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதம்

    மாசி மாதத்து கிருஷ்ணபட்ஷ சதுர்த்ததி திதியிலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இதில் உபவாசஞ் செய்து நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவ பூசை செய்தல் வேண்டும். நான்கு யாமப் ப+சையும் அவ்வக் காலத்தில் செய்வது உத்தமம். ஒரு காலத்தில் சேர்த்துச் செய்வது மத்திமம்.

    பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி நானள்கு யாமப் ப+சையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமஸ்கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்க முதலிய மூல மூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்திற்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம்.

    சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும். சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் உண்ணல் மத்திமம், பழம் உண்பது அதமம், தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம், சிவராத்திரி தினத்திலே இராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் இலிங்கோற்பவ காலமாகும்.

    நான்கு யாமமும் நித்திரையழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரையழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவதரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் அவசியம் அனுட்டிக்கத்தக்கது.

    கேதார கவுரி விரதம்

    புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.

    இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு போசனஞ் செய்து இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்பஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர்.

    பிரதோஷ விரதம்

    சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியிலே சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி அநுட்டித்தல் வேண்டும்.

    பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்நானஞ்செய்து சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டும் செய்யலாகாது.

    பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு உத்தமகாலம்.

    சுக்கிரவார விரதம்

    சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதற்சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்ழிதூறும் பார்வதி தேவியாரைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமியீறாகிய முதல் ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதமாகும். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

    விநாயக சதுர்த்தி

    ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ஷத்து சதுர்த்தியிலே விநாயகக்கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுதில் பகலிலே போசனஞ் செய்து இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

    விநாயக சஷ்டி விரதம்

    கார்த்திகை மாத்தது கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து இறுதி நாளாகிய சஷ்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

    கார்த்திகை விரதம்

    கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக்கடவர். இவ்விரதம் பன்னிரெண்டு வருஷகாலம் அனுட்டித்தல் வேண்டும்.

    கந்த சஷ்டி விரதம்

    ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசஞ் செய்யக்கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அனுட்டித்தல் வேண்டும். மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே குப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.

    • பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி.
    • மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும்.

    திருக்காளத்தி என்று இத்தலத்துக்கு பெயர் வந்தது மிகவும் சுவை ததும்பும் வரலாறு ஆகும். இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அருகே சிலந்தி ஒன்று வலையைப் பின்னி இருந்தது. இது சிவலிங்கத்திற்கு ஒரு பந்தலைப் போல காட்சியளித்தது.

    தீப்பட்டு அந்த பந்தலானது அறுந்துப் போகாத வகையில் அவ்வப்போது பந்தலினை அந்த சிலந்தி புதுப்பித்துக் கொண்டே அந்த சிலந்தி செய்து வந்தது.

    ஆனாலும் ஒரு சமயத்தில் சிலந்தி அமைத்திருந்த பந்தல் தீக்கு இரையாகியது. ஆனாலும் சிலந்தி அதிலிருந்து மீண்டது. பிறகு முக்தி பெற்றது.

    அதே காலக்கட்டத்தில் காளன் என்கிற நாகம் ஒன்று இருந்தது. இது யாரையும் கடிப்பது கிடையாது. இது நதமது நஞ்சினை வீணாகாது காத்து அதனை நாகமணியாக திரளச் செய்தது. இந்த நாகமணியை சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்துத் திருப்பணியை மேற்கொண்டு வந்தது.

    அங்கே அந்தி என்கின்ற சிவகணத் தலைவர் ஒருவன் யானையாக அவதாரம் செய்திருந்தான். இந்த யானை பொன் முகலியை கொண்டு வந்து திருக்காளத்தியப்பனுக்கு தம்முடைய துதிக்கையினால் திருமஞ்சனம் செய்து வந்தது. அதோடு பூவையும் சூட்டி மகிழ்ந்துது வந்தது. இது தூய வழிபாட்டு முறையாக காளன் என்கிற பாம்பிற்கு தோன்றவில்லை.

    இதனால் நாகத்திற்கு கோபம் உண்டானது. ஒருநாள் யானையின் துதிக்கையில் நுழைந்து அதற்கு துன்பத்தினை தந்தது. இதனால் கோபம் கொண்ட யானை பாம்பினை சுற்றி தரையிலே அடித்துக் கொன்றது. ஆனால் பாம்பு அதனை தீண்டியபோது இருந்த விஷமானது யானையையும் கொன்று போட்டது. இதையடுத்து அந்த யானை, பாம்பு இரண்டும் முக்தி அடைந்து பெருமை பெற்றன.

    சிலந்தி, யானை, பாம்பு ஆகிய மூன்றும் முக்தி பெற்ற தலம் என்பதினால் இது சீகாளத்தித் தலமானது சீ என்பது சிலந்தியையும் காளன் என்பது பாம்பையும், அந்தி என்பது யானையையும் குறித்து வரும் சொல்லாகும். இத்தலத்தின் பெயர் இவ்வகையிலேயே உருவானது. இதனால் இந்த தலத்தினை வணங்குகின்றவர்கள் வீடுபேற்றினை அடைவார்கள்.

    கோவில் அமைப்பு

    ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. இவற்றிலே கோவில் வரலாறு மற்றும் திருப்பணி செய்யப்பட்ட செய்திகளை காணலாம்.

    இங்குள்ள வாயில் மாடத்திலே கணபதியும், முருகனும் காட்சி தருகின்றார்கள். இதனையடுத்து விசுவநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும் காணப்படுகின்றது.

    இதனையடுத்து தேவிமாடம் ஒன்று காணப்படுகின்றது.இங்குள்ள மற்றொரு முக்கியமான சந்நிதி பால கணகம்பாள் சந்நிதியாகும். பாலா என்பது அம்பிகையின் பெயராகும். பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி ஆவாள். இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்தே பாலகணகம்பாள் என்று அழைக்கப்பட்டது.

    இவர் வாயிலிலேயே கொலுவீற்றிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இதற்கு காரணம் இவள் ஆவுடையாரிடம் கோபம் கொண்டு இவ்வாறு தவமியற்றுகின்றாள் என்று கூறுவார்கள்.

    இதையடுத்து பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. மேற்கு பகுதி இக்கோவிலிலே முடிகின்றது. இதனை அடுத்து மண்டபம் காணப்படுகின்றது.

    தெற்குப்புற பெருவழியில் ஒரு மேடைக் கோவில் உள்ளது. இந்த மேடைக் கோவிலில் சிவலிங்கம், கணபதி, பைரவர் உள்ளனர். இவை வலதுபுறமாக அமைந்துள்ளது.

    இடதுபுறமாக சுவற்றிலே துளை போட்டுள்ளனர். அந்த துளையில் நாம் பார்க்கின்றபோது நந்தி பெருமானை பார்க்க முடிகின்றது. இதற்கு பிறகு மேடைக் கோவிலில் நாம் சோமநாதர் மற்றும் மீனாட்சியம்மை சந்நிதிகளை பார்க்கலாம்.

    இதற்கு அடுத்தப்படியாக மயில்வாகனன் காணப்படுகின்றார். பிறகு நாம் பொன்முகலியை அடையக்கூடிய வாயிற்படியை பார்க்கலாம். இங்கு தமிழிலே அர்ச்சனை நடைபெறுகின்றது.

    ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த கோவிலுக்கு பல அறப்பணிகளைச் செய்துள்ளார். இவருடைய சிலையானது இங்கே வைக்கப்பட்டுள்ளது.

    இவருடைய இச்சந்நிதியை அடுத்து நாம் காண்பது சூரியநாராயண சுவாமி கோவில் ஆகும். இங்கு தலவிருட்சம் உள்ள பகுதியாக இது விளங்குகின்றது.

    இங்கு பாம்புப பிரதிஷ்டைகள் அதிகம் உள்ளன. இங்கு மகிழமரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கல்லால மரமும், வில்வ மரமும் ஆகும்.

    இதனையடுத்து நாம் பார்த்தால் பொன் முகலியாறு ஓடுவதைக் காணலாம். இது மற்றொரு பாலாறு எனக் கூறப்படுகின்றது. இந்த ஆற்றங்கரையில்தான் கண்ணப்பர் நடந்து வந்து இறைவனை வணங்கியதாக கூறுகின்றார்கள்.

    பொன்முகலி ஆற்றங்கரைக்கு நாம் வந்து விட்டால் கண்ணப்பரை வணங்காமல் போகக்கூடாது. இந்த பொன்முகலி ஆறே புனிதக் கங்கையாக ஆகியது. இங்கு பல ஈஸ்வர அருளாளர்கள் நீராடி மகிழ்ந்து பக்திப் பரவசத்திலே ஆழ்நடதுள்ளார்கள் எனக் கூறுவது பொருந்தும்.

    இந்த ஆற்று நீரினை எடுத்துத் தலையிலே தெளித்துக் கொள்வதால் நாம் புண்ணியம் அடைந்தவர்கள் ஆகின்றோம். ஈஸ்வரனின் பேரருளைப் பெற்றவர்கள் ஆகின்றோம்.

    இங்குள்ள மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும். லிங்கத்தினை வழிபட்டு 108 அர்ச்சனைகளை செய்ய முடியாதவர்கள் இங்கு வந்து இந்த லிங்கங்களை வணங்கினால் அந்தப் பலனை நிச்சயமாக அடைந்தவர்கள் ஆகின்றனர்.

    இந்தக் கோவிலின் கிழக்குப் பகுதியிலே கொடிமரமும் பலிபீட லிங்கமும் உள்ளன. இங்கு விளக்குத் தூண் ஒன்று இருக்கின்றது. இது கொடி மரத்தினையும் விட மிகவும் உயரமாகக் காணப்படுகின்றது.

    இங்கு ஒரு மேடை உள்ளது. எட்டுத் திசை யானைகள், பைரவர்கள், திக்குப் பாலகர்கள் ஆகியோரை இந்த மேடையிலே காணலாம். இந்த எட்டுத் திசைகளிலும் நந்தித் தேவர் இருப்பார். இவரை வணங்கிய பின்னரே நாம் காளத்தியப்பரை வணங்க வேண்டும்.

    நந்தி பெருமானை திசைக் காவலர்களே சுமக்கின்றார்கள். எனவே இவரோடு நாம் இவர்களையும் சேர்த்து வணங்குதல் வேண்டும். இந்தத் திருத்தலமானது யோகத்திற்குரிய சிறப்புத் தலமாக பேசப்படுகின்றது. இங்கு ஆங்காங்கே பல மாடங்கள் இருக்கின்றன. இவ்விடங்களில் பெரிய யானைலிங்கங்களை காணலாம்.

    கருவறையில் உள்ள சிவலிங்கமே காளத்திப்பர் எனப்படுகின்றர். இந்தக் கருவறையின் வாயிலிலே நாம் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். இந்தக் கோவிலுக்கு காளிதேவியின் அருள் அதிகமாகவே உள்ளது. இவை பழைமை, சிறப்பு, தலைமை, சித்தி முதலிய பெருமையை பெற்று விளக்குகின்றன.

    இங்கு மேலும் மணிகண்டேசர் கோவில் தனியாக உள்ளது. இங்கு இறந்தவர்களை எழுப்பி அவர்கள் காதுகளிலே மந்திரம் ஓதி அனுப்புகின்றார் இவர். இங்குள்ள பொன் முகலியாறு மணிக் கங்கை யெனவும், மணிகர்ணிகை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் உட்கோவிலான காசி விஸ்வநாதர் சந்நிதி பூட்டியே உள்ளது.

    கண்ணப்பர் ஈஸ்வரருக்குக் கண்களைத் தந்த இடம் இந்த மலையின் உச்சியிலே உள்ளது. கண்ணப்பர் ஆலயத்தினை யடுத்து நாம் சித்தீஸ்வரம் காணுகின்றோம்.இதனையடுத்து ஒற்றை மண்டபக் கோவில் காணப்படுகின்றது.

    இங்குள்ள யோக மூர்த்தம் அய்யப்பனின் உருவத்தினை போன்று விளங்குகின்றது. மேலும் தட்சிணாமூர்த்தி செங்கல்வராயர் சந்நிதிகள் உள்ளன.

    இங்கு செப்பு நந்தி, சலவைக் கல் நந்தி ஆகியன உள்ளன.இங்குள்ள நந்திகள் முகம் பன்றியைப் போல காணப்படுகின்றது. இது பல்லவர்களின் சின்னமாகிய பன்றியை உணர்த்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. இங்கு பஞ்சமுகமான லிங்கம் உள்ளது.

    இங்கு நமது மனத்தினை கவர்வது காளத்தியார் மூர்த்தம் ஆகும். இங்குள்ள பாணம் மிகவும் முக்கியமானது ஆகும். இது உலோகத்தினால் ஆன கலசத்தினைக் கொண்டு விளங்குகின்றது.

    இங்கு கணபதி, பெருமாள், சப்தமுனிவர், சனிபகவான் போன்றோர் ஸ்தாபித்த பல லிங்கங்கள் உள்ளன. கனகதுர்க்க, கார்த்தியாயினி, உடுப்பி பாலசுப்பிரமணியம் ஆலயங்களும் உள்ளன.

    இக்கோவில் ஆதிசங்கரர் விஜயம் செய்த தலமாகும். இங்கு காணப்படுகின்ற சண்டிகேசுவரர் சந்நிதி மிகவும் வெளிச்சமாகக் காணப்படுகின்றது.

    தேவாரம், திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், திருவருட்பா, திருப்புகழ், ஞானப்பூங்கோதையார் துதி போன்ற பாடல்கள் பெற்றது இத்திருத்தலம்.

    • பூஜைக்கு இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது.
    • ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் மருங்கூர். அங்கு வாழும் வன்னிய இன மக்களில் காளிங்கராயர் என்ற பட்டப் பெயருடைய பங்காளிகள்.

    தங்கள் குலதெய்வமாக ஆகாச வீரனை வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாட்டு முறை முற்றிலும் மாறுபட்டதாகவும் பண்பாட்டு தொன்மை உடையதாகவும் விளங்குகிறது. சிறு தெய்வம் என நிறுவன சமயத்தினரால் குறிப்படப்படும் வழிபாட்டு இடங்களில் வேல், சிலை, மரம் என ஏதேனும் ஒரு அடையாளம் காணப்படும்.

    ஆனால் ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை. ஆகாசம் எனப்படும் வானத்தில் அவர்களின் வீரன் இருப்பதாக நம்புகின்றனர் என்பதைக் கடவுளின் பெயரே உணர்த்திடும்.

    பங்காளிக் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக் கொண்டு ஆகாச வீரனுக்குப் பூஜை செய்வது வழக்கம். ஆடு, பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டி விட்டு அவற்றைப் பலியிடுவர். இவ்வாறு உயிர் பலி கொடுத்து நடத்தப்படும் பூஜை, பிலி பூஜை எனக் குறிப்பிடப்படுகின்றன. உயிர் பலியின்றி, பொங்கல் மட்டும் பொங்கி செய்யப்படும் பூஜை.

    பூஜைக்கு இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது. மண் பானை, சட்டி, அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன்படுத்துகின்றனர். மஞ்சள், மிளகு ஆகியவற்றைத் தவிர உப்பு, புளி, மிளகாய் என எதையும் பயன்படுத்துவதில்லை. நெல்லை குற்றுவது, சமைப்பது, மஞ்சள் அரைப்பது என அனைத்து பணிகளையும் ஆண்களே செய்ய வேண்டும்.

    பூஜைக்கு பொருட்களை கொண்டு செல்லும் போதும், மஞ்சள் அரைத்து எடுத்துச் செல்லும் போதும் எதிரில் யாரும் வராமல் இருக்கும்படி அறிவிப்பு செய்து அதன் பிறகே எடுத்துச் செல்வர். சமைத்த உணவு வகைகளை படைப்பதற்கு வாழை இலையை பயன்படுத்துவது இல்லை. பூவரச மர இலையை ஒன்றுடன் ஒன்று இணைத்து சீவாங்குச்சியால் தைத்துத் தையல் இலையாக்கிப் பயன்படுத்துகின்றனர். இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகின்றது.

    காட்டு மல்லிப் பூவைத்தான் பூஜைக்கும் பயன்படுத்துகின்றனர். படைக்கும் போது படையல் செய்பவர் வாயைக் கட்டிக் கொண்டு தான் படைக்க வேண்டும்.

    மேலும் பூஜைக்கு சூடம், சாம்பிராணி தவிர வேறு பொருட்களை பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு இலைக்கும் முன்பாக சூடத்தை கொளுத்தி எரியச் செய்வர்.

    பூஜையில் கலந்து கொள்ளும் ஆண், பெண் சிறுவர்கள் அனைவரும் வெள்ளை உடையில் தான் வர வேண்டும். கறுப்பு நிற நாடாவோ, அரைஞான் கயிறோ அணியக் கூடாது. ஆகாச வீரனுக்குக் கறுப்பு ஆகாது என்பதால் அக்குடும்பத்தினர் எப்போதும் கறுப்புநிற அரைஞான்கயிறு அணிவதில்லை.

    பூஜை முடிந்ததும் முதல் உணவை ஆகாயத்தை நோக்கி விசுவது மரபு. ஆகாச வீரன் பெற்றுக் கொள்வார் என்று நம்புகின்றனர்.

    இந்த பூஜையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நீத்தார் நினைவுச்சடங்கு போலவே அமைந்துள்ளன. பூஜை அன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை. அன்று தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்பதில்லை. (வாங்க என்று அழைப்பதில்லை)

    உப்பின்றி சமைப்பது பூஜை பொருட்களை கூடையில் வைத்து எடுத்துச் செல்வது அப்போது யாரும் எதிரில் வராமல் இருப்பது, பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு தொடர்புடையவை. எனவே தங்கள் நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போரில் இறந்த வீரனையே இவர்கள் தெய்வமாக வழிபடுவதாகக் கருத முடிகிறது. இன்றும் இந்த குலதெய்வ வழிபாடு தொடர்கிறது.

    முதல் மாதம் குலதெய்வ வழிபாடு

    கர்ப்ப காலத்தில் பெண்கள் விரதங்களை கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது நல்லது. அந்த காலக்கட்டத்தில் இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு சிறப்பு சேர்க்க முடியும் என்றே சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒரு பெண் கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். இரண்டாவது மாதத்தில் சூரியன் வழிபாடும், 3-வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 4-வது மாதத்தில் செவ்வாய், 5-வது மாதத்தில் புதன், 6-வது மாதத்தில் குரு, 7-வது மாதத்தில் சுக்கிரன், 8-வது மாதத்தில் சனி வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோல் ஒன்பதாவது மாதத்தில் மீண்டும் குலதெய்வ வழிபாட்டுடன், இஷ்ட தெய்வ வழிபாட்டையும் செய்யலாம். இதில் சூரியன் என்பது சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறது. எனவே சிவ வழிபாடு மேற்கொள்ளலாம். அதற்கான ஆன்மிகப் பாடல்கள், மந்திரங்களை ஜபிக்கலாம்.

    எனவே, கர்ப்ப காலத்தில் விரதம் இருப்பதைத் தவிர்த்து விட்டு, இறை வழிபாட்டை மேற்கொண்டாலே சிறப்பான எதிர்காலம் உள்ள குழந்தைகளை பெண்களால் பெற முடியும்.

    • பெரம்பலூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் சனி மகா பிரதோஷம் விழா நடந்தது. இதை முன்னிட்டு ஈசன் மூலவர் உற்சவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், தனலட்சுமி சீனிவாசன் குழும இயக்குநர் மணி, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




    • அகரம்சீகூர் வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது
    • வாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

    அகரம்சீகூர்:

    அகரம்சீகூர் அடுத்து வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரிையயொட்டி அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    • நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம்.
    • மரத்தில் இன்று ஒரே பூவில் 2 மொட்டுக்கள் மலர்ந்துள்ளது.

    சேலம்:

    சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது. நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும். பூவுலகின் மகத்தானது. நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புண்ணியம் தான். தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தால் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். 3 கால பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

    நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும். நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது. நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான, உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் . ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும். இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய, சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது.

    நாகலிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை 'மாத்ருகா ரிஷிகள்' என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம். நாகலிங்க பூவை வழிபாட்டால் நீண்ட கால தீராத நோய் தீரும். மன வேதனை குறையும்.

    இத்தகைய அற்புத மலரான நாகலிங்க பூ சேலத்தில் மலர்ந்துள்ளது. சேலம் பெரம்மனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியில் ஒரு உள்ள வீட்டில் மிகவும் பழமையான நாகலிங்க மரம் உள்ளது. இந்த மரத்தில் இன்று ஒரே பூவில் 2 மொட்டுக்கள் மலர்ந்துள்ளது. சிவராத்திரி அன்று இந்த அதிசயப் பூ பூத்துள்ளதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். 

    • சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் அர்ச்சனை செய்ய, வழிபாடு நடத்த பூக்களின் தேவை அதிகரித்தது.
    • பூக்களின் விலையும் நேற்றையை விட அதிகமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் விளார் ரோடு சைலஜா மண்டபத்தில் பூச்சந்தை இயங்கி வருகிறது.

    இந்த சந்தைக்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல் இங்கிருந்தும் வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

    பண்டிகை, திருவிழாக் காலங்கள்,

    சுப முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை கணிசமாக உயரும். அதன்படி இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் அர்ச்சனை செய்ய, வழிபாடு நடத்த பூக்களின் தேவை அதிகரித்தது.

    இதன் காரணமாக தஞ்சை பூச்சந்தையில் இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று 1 கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ இன்று கிடு கிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ரூ.800-க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் கனகாம்பரம் கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ.200, சம்பங்கி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த பூக்களின் விலையும் நேற்றையை விட அதிகமாகும்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது:-

    சிவராத்திரி என்பதால் இன்று பூக்களின் தேவை அதிகமானது. இதன் காரணமாகவும் தற்போது பனிப்பொழிவால் பூக்களின் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

    இந்த காரணங்களால் பூக்களின் தேவை அதிகரித்தது. இருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றனர்.

    • ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருகிறார்.
    • அதனால் இன்று தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று தமிழகம் வருகிறார்.

    கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மகா சிவாரத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

    இந்நிலையில், ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவதையொட்டி இன்று தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை தியானலிங்கம், லிங்கபைரவி, சூர்ய குண்டம், சந்திர குண்டம் ஆகிய இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 9 மணிக்கு பிறகு இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • ராமேசுவரம் கோவில் சிவராத்திரி விழாவில் கரு. கருப்பையா பட்டிமன்றம் நாளை நடக்கிறது.
    • மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.

    மதுரை

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கோவை சூலூர் சித்த மருத்துவர் கரு.கரு. கருப்பையாவின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து இரவு 8மணிக்கு ''தமிழர் தந்தை'' சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவர் பொறுப்பில், மானாமதுரை பேராசிரியர் திருமாவளவன், தூத்துக்குடி வக்கீல் சாந்தா பங்கேற்கும் ''நகைச்சுவை பட்டிமன்றம்'' நடக்கிறது.ராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆயிரவைசிய முத்தாலம்மன் கோவில் சிவராத்திரி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பட்டிமன்ற நடுவர், மடப்புரம் விலக்கு கரு.கருப்பையாவின் ''ஜோதிட சொற்பொழிவு'' 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    • தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.
    • சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.

    சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படும். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இந்த நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு. அதேபோல், விரதம் இருக்கிறார்களோ இல்லையோ... அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று தென்னாடுடைய சிவனை வழிபடுவார்கள் பக்தர்கள்.

    மாத சிவராத்திரியில் விரதம் இருந்து சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் சிவபெருமான்.

    மாத சிவராத்திரி நாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

    சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது.

    ×