என் மலர்
நீங்கள் தேடியது "ஆராய்ச்சி"
- ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.
- இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம்
74 மில்லியன் (7.4 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த மிகச்சிறிய பாலூட்டியின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் 40 கிராமுக்கும் குறைவான எடையுள்ள ஒரு சிறிய பாலூட்டி (mammal) உயிரினத்தின் உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கடைவாய்ப்பல் உட்பட தாடை எலும்பின் ஒரு பகுதியாக இருக்கும் புதைப்படிவம் கிடைத்துள்ளது.
சிலியின் மாகெல்லன் பகுதியில் உள்ள ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.
சிலி பல்கலைக்கழகம் மற்றும் சிலியில் உள்ள மில்லினியம் நியூக்ளியஸ் ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த ஆராய்ச்சி பிரிட்டிஷ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது எலியை விட சிறிய பாலூட்டியாகும்.
இது பிளாட்டிபஸைப் போன்ற முட்டையிடும் உயிரினம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அல்லது கங்காருவைப் போல அதன் குஞ்சுகளை அதன் உடலின் ஒரு பை போன்ற பகுதியில் வைத்திருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அதன் பற்களிலிருந்து, இது கடினமான காய்கறிகள் அல்லது நண்டுகளை உண்ணும் ஒரு விலங்கு என்பதை அறிய முடிகிறது.
- கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கோவை:
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக்துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் மனிதர்களுக்கு ஏற்பட உள்ள நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிகள் பல்வேறு தரப்பிலும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிறந்த குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா? என்பதை அறிய 3 மாதங்களுக்கு முன்பு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை தொடங்கினர்.
குழந்தைகளிடம் ரத்தம் எடுக்காமல், வீணாகும் நஞ்சுக்கொடிகளை சேகரித்து, அதில் உள்ள ரத்தத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் சுதா ராமலிங்கம் மற்றும் ஆராய்ச்சியாளர் சிவசெல்வக்குமார் கூறியதாவது:-
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புற சூழல் கெடுவது மட்டுமின்றி, மனிதர்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் நாங்கள் குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா என்பதை அறிய முடிவு செய்தோம்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்களது ஆராய்ச்சியை தொடங்கினோம். இதற்காக நாங்கள் குழந்தைகளிடம் இருந்து ரத்தம் எடுக்காமல், வீணாகக்கூடிய நஞ்சு கொடிகளை சேகரித்து அதில் உள்ள ரத்தம் மூலமாக எங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஆராய்ச்சி ஆரம்ப நிலையிலேயே உள்ளது.
எங்களது ஆரம்ப கட்ட பரிசோதனையில் நாங்கள் நஞ்சுக்கொடிகளில் உள்ள ரத்தத்தை எல்.இ.எம்.எஸ் என்ற கருவி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது அந்த ஆய்வில், சிசுக்களின் நஞ்சுக்கொடியிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.
எனவே கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் உணவு உட்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்த வேண்டாம்.
இதேபோன்று விவசாயிகளின் உடம்பில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதா? என்ற ஆராய்ச்சியையும் மேற்கொண்டோம்.
இதற்காக கோவை வேடப்பட்டி பகுதியில் 350 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் உடலில் பூச்சி கொல்லி மருந்து பயன்பாடு தாக்கம் உள்ளதா? என ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் தன்மை, ரத்தத்தில் இருப்பதை கண்டுபிடித்தோம்.
மேலும் பூச்சிக்கொல்லி தாக்கம் காரணமாக, அவர்களது ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பு அதிகரித்து காணப்படுவதையும் இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்தோம்.
பூச்சிக்கொல்லி பாதிப்பு ரத்தத்தில் இருப்பதால் புற்றுநோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.
நாங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் இது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
- முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன.
- இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம்
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வௌவால்களில் காணப்படும் 'HKU5' என்ற துணை வகை வைரஸ், ஒரு சிறிய மரபணு மாற்றத்துடன் மனித செல்களுக்குள் நுழைந்து, அடுத்த உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான இந்த ஆய்வின் விவரங்கள், முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன
வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான ஆய்வின்படி, HKU5 வைரஸ்கள் மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸும் அதே ACE2 ஏற்பியைப் பயன்படுத்துகிறது.
இந்த HKU5 வைரஸ், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) உடன் நெருங்கிய தொடர்புடையது. MERS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சுமார் 34% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ்கள் ஜப்பானிய வீட்டு வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், சமீபத்திய ஆய்வுகள் இவை மின்க்ஸ் போன்ற இடைநிலை விலங்குகளுக்கு பரவி வருவதாகக் கூறுகின்றன. இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
WSU வைராலஜிஸ்ட் மைக்கேல் லெட்கோ, "இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், அதற்கான திறன் உள்ளது. எனவே அவற்றைக் கண்காணிப்பது முக்கியம்" என்று எச்சரித்துள்ளார்.
ஆல்பாஃபோல்ட் 3 போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள், வைரஸ் எவ்வாறு செல்களுடன் தொடர்பு கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றி, ஆராய்ச்சி வேகத்தை விரைவுபடுத்தியுள்ளன.
இந்த ஆய்வு, எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் உத்திகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன.
- விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான உயர்தர உள்ளூர் பாரம்பரிய ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பால சரஸ்வதி வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசும்போது:-
இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். அங்கக வேளாண்மையில் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன . விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் (பொ ) ராஜப்பன், முனைவர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உளவியல் துறை இணை பேராசிரியர் இளமதி உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து பேசினார்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல் நடத்தி பாரம்பரிய நெல் பயிரிடுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில் முனைவர்கள் தண்டாயுதபாணி, புஷ்பா, ஆனந்தி, சித்ரா, அருள்செல்வி, முன்னோடி விவசாயி தளபதி, வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன் இந்த கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா நன்றி கூறினார்.
- விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
- பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி கவின் கிருஷிகா தேர்வானார். இதனால் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ராக்கெட் தொழில்நுட்பங்கள் பார்வையிட இஸ்ரோ நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இதற்காக இளம் விஞ்ஞானி திட்டம் அமல்படுத்தியது. இது இஸ்ரோ நிதி உதவியுடன் பள்ளி மாணவர்களின் கல்விக்கான பயிற்சி திட்டம் ஆகும். இதற்கான தேர்வு ஆன்லைனில் ஸ்பேஸ் க்விஸ் என்ற தேர்வு நடத்தப்பட்டது.
இதில் சத்யா வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.ஆர். கவின் கிருஷிகா தேர்வானார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிர்வாகம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை மாணவி கவின் கிருஷிகாவுக்கு மே 14-ந் தேதி முதல் 26-ந் தேதி பார்வையிடவும், பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும்
- மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால் தாக்கப்படுகின்றனர். இவற்றில், 8.8 மில்லியன் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன
நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் என பலவகை உள்ளன. குழந்தைகளையும் புற்றுநோய் விட்டு வைப்பதில்லை. 2012-ம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் பரவுகிறது.
உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயாளியின் நிலையை சிக்கலாக்குகிறது.அத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.
இந்நிலைதான் பெரும்பாலான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணம். கட்டி செல்கள் ரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேறி மற்ற உறுப்புகளுக்கு பரவுகின்றன.
இதனை தடுக்க அமெரிக்க, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) மற்றும் பிரிட்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசி) விஞ்ஞானிகள் மெட்டாஸ்டாசிஸின் வழிமுறைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்தனர்.
முதன்முறையாக, விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்கள் உறுப்புகளில் ஊடுருவும் முறையை விரிவாக கண்டுபிடித்தனர். புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
புதிய மருந்துகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உடலில் ஒரு இடத்தில் புற்றுநோய் தொடங்குகிறது. அங்கிருந்து கட்டி செல்கள் உடைந்து, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.
இதன் விளைவாக மற்ற உறுப்புகளில் 2-ம் நிலை கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் மண்டலத்தில் நுழைவதற்கு முன்பு முதன்மைக் கட்டியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். கட்டி பெரிதாகி, அருகில் உள்ள திசு, நிணநீர், ரத்த நாளங்களில் பரவும் போது அந்த செல்கள்தான் முதன்மையான தளமாக அமைகிறது.
புற்றுநோய் பரவலை தடுக்க விஞ்ஞானிகள் அதன் முன்மாதிரியை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.
ரத்த ஓட்டத்திற்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் எண்டோடெலியம் எனப்படும் ஒரு அடுக்கு உள்ளது. விஞ்ஞானிகள் இதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.
ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.
"சேற்றில் சிக்கிக் கொண்டால், வெளியே வருவதற்கு கல் போன்ற சுவர் வேண்டும். புற்றுநோய் செல்கள், எண்டோடெலியத்தில் இருந்து வெளியேறி, மற்ற சுவர்களில் பரவுவதையே தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
உடலில் உள்ள திசுக்களில் அதிக நுண்துளைகள் உள்ளன. மென்மையானதாக இருப்பதால் மேலும் வேகமாக புற்றுநோய் செல்கள் ஊடுருவ முடியும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடலில் உள்ள குறிப்பிட்ட திசுக்களின் புதிய வேதியியல் பண்புகள் 2-ம் நிலை கட்டிகள் எங்கு உருவாகின்றன என்பதை தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை இந்த ஆராய்ச்சி எழுப்பியுள்ளது.
மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
இந்த ஆராய்ச்சி மூலம் உடலில் புற்றுநோய் பரவலை தடுக்க முடியுமா? எனவும் மருத்துவ வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- வருகிற 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்தும், 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்தும், 23-ந்தேதி கறவை மாடு வளர்ப்பு குறித்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியமில்லை. பயிற்சியில் பங்கு பெறுபவர்கள் ஆதார் நகலுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாழை, உரிய வளர்ச்சி அடையாததால் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
- கோவை வேளாண்மை பல்கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், நாளை 9-ந்தேதி நேரில் வந்து உரிய வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
அவிநாசி:
அவிநாசி வட்டம், சேவூர் அடுத்த தண்டுக்காரன் பாளையம், ராமியம்பாளையம், குமாரபாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆதராம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தனியார் நிறுவனம் ஒன்றில், கடந்த 2022 செப்டம்பர் மாதம் வாழைக்கன்றுகள் வாங்கி பயிரிட்டனர். வாழை, உரிய வளர்ச்சி அடையாததால் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
வாழைக்கன்றுகளை விற்ற தனியார் நிறுவனத்தினர், விவசாயிகள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை அவிநாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் மோகனன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமா சங்கரி, துணை தாசில்தார் சாந்தி, சேவூர் ஆர்.ஐ., திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி வாழை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், கோவை வேளாண்மை பல்கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், நாளை 9-ந்தேதி நேரில் வந்து உரிய வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்வர் என்று முடிவு செய்யப்பட்டது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சட்ட விழிப்புணர்வு ஆணை மாநில செயலாளர் சதீஷ்குமார், வேளாண் தொழில் முனைவோர் மன்ற மாநில செயலாளர் வேலுச்சாமி, நவீன்பிரபு, ஜோதி அருணாச்சலம், குருசாமி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
- இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
- இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.
பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

- இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.
- சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாக உள்ளது
அமேரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளி மையம் பிரபஞ்சத்தைப் பற்றிய புதுப்புது உண்மைகளை தனது அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் செய்யும் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தியவாறு இருக்கிறது.
அந்த வகையில் சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக்களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை [GIGANTIC JETS] படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த நிகழவைப் படப்பிடித்துள்ள நாசா, இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.
இதற்குமுன் இல்லாதவகையில் 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வானது, இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தொடர்ச்சியாக விழுந்த இந்த 4 ஒளித்திரள் ஜெட் மின்னல்களும் ஒன்றுக்கொன்று சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்துள்ளன. வளிமண்டலத்தின் மேற் பரப்பில் உள்ளதால் மின்னலின் மேற்புறத்தில் சிவப்பு நிறமாகவும், பூமியை நோக்கி வரும் கீழ் பகுதி ரோஸ் நிறத்திலும் உள்ளது. இது சாதாரணாமாக ஏற்படும் மின்னலாகவன்றி மிகப்பெரிய அளவுடையதாகவும் சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாகவும் உள்ளது.
- கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
- கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும்
அமரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடல், நதி என பூமியின் 70 சதவீத பரப்பு நீரினால் ஆனதாகும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையும் நீரே ஆகும். இந்த சூழலில் நீர் நிலைகளில் ஆக்சிஜன் வேகமாக குறைந்து வருவதால் நீரை சார்ந்துள்ள உயிர்க்கோலம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஏனெனில் கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
எனவே ஆக்சிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது உணவுச் சங்கிலியில் பிளவை ஏற்படுத்தும். மேலும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்சிஜன் கடலிலிருந்துதான் உற்பத்தியாகிறது. ஆகையால் கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- இவை நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும்
- 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன
உணவுக்கு சுவை சேர்க்கும் உப்பும் சர்க்கரையும் அத்தியாவசிய சமையல் பொருட்களில் பிரதானமானது. இந்தியாவில் விற்பனையாகும் அத்தகு உப்பிலும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Toxics Link என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு நடந்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிராண்டு சர்க்கரை மற்றும் உப்பில், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக்கள் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தூள் உப்பு, கல் உப்பு என இரண்டிலும் இந்த துகள்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும், கடைகளிலும் வாங்கிய சர்க்கரை உப்பு வகைகளை அந்நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
ஒரு கிலோ தூள் உப்பான அடியோடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. மேலும் ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில், 11.85 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 0.1 mm முதல் 5 mm அளவில் காணப்படுகின்றன.






