நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வெளீயிட்டு உள்ளது.

இன்று 10 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5 மி.மீட்டரும்‌, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 19-ந் தேதி மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில், தெற்கு திசையில் இருந்து காற்று வீசும். 

அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும்இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று முதல் 3 நாட்களுக்கு மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சி மற்றும் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது என கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள்வதோடு, சோட்டா தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com