

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நம்பர் 1 இடத்தையும் அடைந்தார்.
டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது. தற்போது நடந்து வரும் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முன்னேறினார்.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஒரு இடம் முன்னேறி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் எலினா ரிபாகினா உலக தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 இடத்துக்கு உயர்ந்தார்.
27 வயதான ரிபாகினா தரவரிசையில் முதலிடத்தை அலங்கரிக்கும் 30-வது மங்கை. முதல் கஜகஸ்தான் நாட்டவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரியணையில் ஏறி தொடர்ந்து 99 வாரங்கள் 'நம்பர் ஒன்'னாக வலம் வந்த பெலாரசின் அரினா சபலென்கா 2-வது இடத்துக்கு தள்ளப்பட் டார்.
இதுகுறித்து ரிபாகினா கூறுகையில், 'உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கவேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அதனை அடைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த சாதனையை எட்ட ஆதரவாக இருந்த எனது பயிற்சி குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்தார்.