

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடந்தது.
இதில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா-மேரி பவுஸ்கோவா ஜோடி, ரஷியாவின் அலெக்சாண்ட்ரா பனோவா-பெல்ஜியத்தின் மகாலி கெம்பென் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய செக் குடியரசு ஜோடி 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நாளை அதிகாலை நடக்கவுள்ளது.