சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலா

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
iga swiatek, jessica pegula
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான எம்மா நவரோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 7-5, 6-2 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள 4-வது சுற்றில் ஜெசிகா பெகுலா, ரோமானியாவின் சொரானா சிர்ஸ்டி உடனும், இகா ஸ்வியாடெக் பிரான்சின் டயானே பாரி உடனும் மோதுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com