சவுரவ் கங்குலியின் மகளுக்கு கொரோனா

சவுரவ் கங்குலியின் மனைவி டோனாவிற்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது.
மகள் மற்றும் மனைவியுடன் சவுரவ் கங்குலி
மகள் மற்றும் மனைவியுடன் சவுரவ் கங்குலி
Published on

கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த கங்குலி கொரோனாவில் இருந்து மீண்டார். அவரை 2 வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

இந்நிலையில் தற்போது கங்குலியின் மகள் சனாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். 

இதை தொடர்ந்து கங்குலியின் மனைவி டோனாவிற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com