வான்கடே டெஸ்ட்: இந்திய அணியில் மூன்று முக்கிய வீரர்கள் அவுட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் காயம் காரணமாக மூன்று முக்கிய வீரர்கள் களம் இறங்கமாட்டார்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
பிசிசிஐ
பிசிசிஐ
Published on

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் காலை 9 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பவுண்டரி எல்லை அருகே ஈரப்பதமாக இருப்பதால், டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கான்பூர் டெஸ்டில் விளையாடிய இஷாந்த் சர்மா, ஜடேஜா மற்றும் ரகானே ஆகியோர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் களம் இறங்கமாட்டார்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்திய ஆடுகளத்தில் ரகானே தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com