உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது ஜாலி-கோபிசந்த் ஜோடி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
jolly, gayathri
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் ரின் இவானகா-கெய் நகனிஷி ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com