

இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் இறுதிப்போட்டியில் வென்று வரலாறு படைத்துள்ளார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று நடைபெற்ற 'கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்' தொடரில் உலகப் புகழ்பெற்ற பேபியானோ கருவானாவை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
கிளாசிக்கல் சுற்றுகளின் முடிவில் கருவானா 6 புள்ளிகள் முன்னிலையுடன் இருந்தார். பிரக்ஞானந்தா 3-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார்
இருப்பினும், ரேபிட் சுற்றில் விஸ்வரூபம் எடுத்த பிரக்ஞானந்தா, இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆட்டத்தின் போக்கையே முற்றிலும் மாற்றியமைத்தார்.
அடுத்து நடைபெற்ற பிளிட்ஸ் சுற்றின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
ஆனால் பிளிட்ஸ் சுற்றின் அடுத்த 3 போட்டிகளில் சமநிலையை தக்கவைத்துக்கொண்ட பிரக்ஞானந்தா, இறுதியில் 15-13 என்ற புள்ளிக் கணக்கில் தனது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.68 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.