டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சுப்மன் கில்.. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
Srilanka test match
Published on

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கல்லே கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது.

அப்போது டாஸ் வென்ற இந்திய கிர்க்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், “நாங்கள் முதலில் பேட் செய்யப் போகிறோம். விக்கெட்டும் வானிலையும் நன்றாக இருப்பதாக தெரிகிறது.

எனவே இது எங்களுக்கு ஒரு நல்ல கிரிக்கெட் நாளாக அமையும் என்று நம்புகிறோம். கடந்த போட்டியில் விளையாடிய அதே ஆடும் லெவனுடன் களமிறங்கியுள்ளோம்.

எங்களிடம் ஐந்து பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள். நம் நாட்டை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம்.

இந்த சந்தர்ப்பத்தில் இது இன்னும் சிறப்பு வாய்ந்தது. எங்களுக்கு இது சுதந்திர தினம் மற்றும் 600-வது டெஸ்ட் போட்டி. எனவே, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடும் இரண்டு அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியா (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில்(கேட்ச்), ரிஷப் பந்த்(வ), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

இலங்கை (பிளேயிங் லெவன்): லஹிரு உதாரா, நிஷான் பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேட்ச்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (வ), கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com