ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது ஆண் குழந்தைக்கு ஆஹான் என்று பெயரிட்டுள்ளனர்

ரோகித் - ரித்திகா தம்பதி 2015 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது ஆண் குழந்தைக்கு ஆஹான் என்று பெயரிட்டுள்ளனர்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், ரோகித் - ரித்திகா தம்பதிக்கு நவம்பர் 15 அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ரோகித்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி இணையத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

இதனிடையே ரோகித் - ரித்திகா தம்பதி தங்களுக்கு பிறந்த ஆன் குழந்தைக்கு ஆஹான் என்று பெயரிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஒரு குடும்ப பொம்மையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அக்குடும்பத்தில் ரோகித் மற்றும் ரித்திகாவின் பெயர்கள் போ என்றும் பிட்ஸ் என்றும் பெயரிட்டுள்ளனர். பெண் குழந்தையின் பெயரை சம்மி அதாவது சமைரா என்றும் ஆண் குழந்தையின் பெயரை ஆஹான் என்றும் ரித்திகா பெயரிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com