இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்கள் குறித்து வெளியான தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்கள் குறித்து வெளியான தகவல்
Published on

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ந் தேதி முடிகிறது.

இதனை தொடர்ந்து 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறும் வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்கள் சிலர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-க்கு டி20 தொடரில் ஓய்வும் ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் ஓபராக செயல்படுகிறார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இரு தொடரிலும் தேர்ந்தெடுக்கபடலாம் எனவுக் தகவல் வெளியாகி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை வருகிற 12-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com