2வது ஒருநாள் போட்டி: 102 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார்.
2வது ஒருநாள் போட்டி: 102 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி
Published on

சண்டிகர்:

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 45 ரன் எடுத்தார். இதன்மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com