

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமிலோ கே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
பென் டக்கெட் 11 ரன்னும், ஜோர்டன் காக்ஸ் 4 ரன்னும், ஜோ ரூட் 8 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த எமிலோ கே - ஹாரி புரூக் ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் எமிலோ கே 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிய ஹாரி புரூக் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.