CSK அணியில் நான் டைவ் அடித்தபோது, டோனி கொடுத்த அட்வைஸ்: நினைவு கூர்ந்த பிராவோ

லாங்-ஆன் திசையில் நின்றிருந்த நான் பந்தை பிடிப்பதற்கான டைவ் அடித்தேன்.4 ரன்களை சேமிப்பதை விட உங்களுடைய 4 ஓவர்கள் மிகவும் முக்கியமானது என்றார்.
CSK அணியில் நான் டைவ் அடித்தபோது, டோனி கொடுத்த அட்வைஸ்: நினைவு கூர்ந்த பிராவோ
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். 10 சீசனில் 154 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

இவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனிக்கும் இடையில் சிறந்த தொடர்பு உள்ளது. எம்.எஸ். டோனியை சகோதரர் என்றே அழைத்து வருகிறார்.

இந்த நிலையில் Beard Before Wicket போட்காஸ்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2018-ல் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தடைவிதிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2018-ல் களம் இறங்கினோம். லாங்-ஆன் திசையில் நின்றிருந்த நான் பந்தை பிடிப்பதற்கான டைவ் அடித்தேன். உண்மையிலேயே எனக்கு அப்போது 34 வயதிற்கு மேல் இருக்கும். அந்த ஓவர் முடிந்தபின்னர், அவர் என்னை அழைத்தார். அவர் என்னிடம், என்னுடைய கிரிக்கெட் மைதானத்தில் இனிமேல் ஒருபோதும் டைவ் அடிக்கக் கூடாது எனக் கூறினார். 4 ரன்களை சேமிப்பதை விட உங்களுடைய 4 ஓவர்கள் மிகவும் முக்கியமானது என்றார். அவர் என்னிடம் சொன்னபோது, ஆஹா என்பது போல் உணர்ந்தேன்.

இவ்வாறு பிராவோ தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com