சொந்தமண்ணில் சதம் விளாசிய அஷ்வினுக்கு தினேஷ் கார்த்திக் வாழ்த்து

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சதமடித்து அசத்தினார். இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.
ASHWIN - Dinesh Karthik
Published on

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அஷ்வின் சதமடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

தனது சொந்த மண்ணில் சதமடித்து அசத்திய அஷ்வினை முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், "நம் மண்ணின் சிறந்த ஆல்ரவுண்டர் அஷ்வினின் டெஸ்ட் சதத்திற்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். மிகச்சிறப்பான ஆட்டம் அஷ்வின். உங்களின் ஹோம் மைதானத்தில் மீண்டும் சதம் விளாசியது மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com