தொடரின் பாதியில் 7 வீரர்கள் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சொல்வது என்ன?

என்னிடம் இது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்படவில்லை என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
Babar Azam
பாபர் அசாம்
Published on

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட ஏழு வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அத்துடன் தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரை உடனடியாக நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, ஏழு வீரர்கள் நீக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பாபர் அசாம் கூறியதாவது:-

என்னிடம் இது குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை. இது எனக்கும் ஒரு புதிய தகவலாகவே இருந்தது. இவையெல்லாம் பற்றி எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. முடிவுகளை எடுத்தது பிசிபி (PCB) தான், எனவே அவர்களால் இதை உங்களுக்கு இன்னும் சிறப்பாக விளக்க முடியும்.

இவ்வாறு பாபர் அசாம் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

பாபர் அசாமின் கூற்று உண்மையாக இருந்தால், பிசிபி (PCB) ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்திருக்கிறது என்று அர்த்தம். மே மாதத்தில் ஷான் மசூத் நீக்கப்பட்ட பிறகு, டெஸ்ட் கேப்டனாக பாபர் அசாம் மேற்கொண்ட இரண்டாவது பதவிக்காலத்திலும் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை பாபர் 1-1 என சமன் செய்தார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், அந்த அணி 2-0 என்ற கணக்கில் யாராலும் முறியடிக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் விளையாடிய கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 10-ல் தோல்வியடைந்துள்ளது.

இங்கிலாந்து தொடர்

லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விரல் காயத்தால் பாபர் அசாம் பங்கேற்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக ஆகா அணியை வழி நடத்தினார். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்தத் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தான் அணியால் 200 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியவில்லை. லீட்ஸில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com