வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
Published on

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக பாலாலய விழா நேற்று தொடங்கியது.

அதன்படி ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் உள்பட மூலவ மூர்த்திகளுக்கு பாலாலயம் நடந்தது.

இதையொட்டி நேற்று முதல் மூலவர் மற்றும் மற்ற சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் முடியும் வரை அத்தி மரத்தாலான மூர்த்திகளுக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com