தெப்போற்சவம்: காமாட்சி, லட்சுமி, சரஸ்வதி தேவியர் தெப்பத்தில் பவனி

ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெப்போற்சவம்: காமாட்சி, லட்சுமி, சரஸ்வதி தேவியர் தெப்பத்தில் பவனி
Published on

திருமலை:

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாகத் தொடங்கி நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின் விளக்குகள், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காமாட்சி, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் எழுந்தருளி ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கபிலத்தீர்த்தம் புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் முப்பெரும் தேவியரை தரிசனம் செய்தனர்.

தெப்போற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சுப்புராஜு, கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலகிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர்.

அதைத்தொடர்ந்து தெப்போற்சவத்தின் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com