திருவோணத்தில் வரும் தை அமாவாசை

அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
திருவோணத்தில் வரும் தை அமாவாசை
Published on

அமாவாசையன்று எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால், அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துன்பங்களில் இருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலச் சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் முன்னோர்களான பித்ருக்கள் தங்களது உறவுகளைப் பார்ப்பதற்காக இந்த பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.

அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பது போலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். அன்றும் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ரு லோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

தை அமாவாசை, இந்த வருடம் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் காலபுருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகர ராசியில், கர்ம காரகன் சனியின் வீட்டில் சந்திரனு டன் சூரியன் சேரும் நாள் மிகவும் விசேஷமான தை அமாவாசையாகும். அதிலும் உத்திராண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பாகும்.

தற்போதைய கோட்சாரத்தில் மகர ராசியில் கர்மகாரகன் சனி பகவான் ஆட்சிபலம் பெற்று, தர்மாதிபதி குருவுடன் இணைந்து, தர்ம கர்மாதிபதி யோகத்தை உலகிற்கு குருவும் சனியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் சூரியனும், சந்திரனும் இணையும் போது உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தில் உரு வாகும் தை அமாவாசை மிகமிக சிறப்பான- உன்னதமான பலன்களை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

சூரியோதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com