சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது

5-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.2-ந் தேதி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது
Published on

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு வைகாசி திருவிழா 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

26-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருவதும் நடக்கிறது.

2-ம் நாள் இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியிலும், 3-ம் நாள் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும்,. 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்திலும், 6-ம் நாள் கற்பக வாகனத்திலும் 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஜூன் மாதம் 2-ந் தேதி 8-ம் நாள் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

9-ம் நாள் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) 11-ம் நாள் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com