சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதூர்த்தி

இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் விநாயகர்.தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர்.
சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதூர்த்தி
Published on

விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள். தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர். விநாயகனை வழிபட சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட அனைத்தும் கிடைக்கும்!

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப்பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்.

முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், ராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கவுதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com