திருப்பதி கோவிலில் தோஷ நிவர்த்திக்காக 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்

கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருப்பதி கோவிலில் தோஷ நிவர்த்திக்காக 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் நடந்தது. பிரம்மோற்சவ விழா தோஷ நிவர்த்திக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் சாமிக்கு புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.

அதன்படி கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரமான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தமிழகத்திலிருந்து 5 டன் மலர்களும், கர்நாடகாவில் இருந்து 2 டன் மலர்களும், திருப்பதி தேவஸ்தான புஷ்பவனத்தில் இருந்து 2 டன் மலர்களும் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து மதியம் 1 மணிக்கு சாமந்தி, சம்பங்கி, தாமரை துளசி, மருவம், தவனம்,வில்வம் உள்ளிட்ட 17 வகையான மலர்கள் 6 வகையான இலைகள் கொண்டு மாலை 5 மணி வரை 9 டன் மலர்கள் கொண்டு புஷ்ப யாகம் நடந்தது.

அப்போது வேத பண்டிதர்கள் ரிக் வேதம், யஜூர் வேதம், கிருஷ்ணயஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், பாராயணம் உள்ளிட்ட வேத மந்திரங்களை ஓதினர்.

திருப்பதியில் நேற்று 73,558 பேர் தரிசனம் செய்தனர். 32,675 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி னர். ரூ.3.79 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com