ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம்

சிவன் கோவிலில் 5 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது. வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம்
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 5 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது. முதல் நாளான நேற்று கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பிரத்யேக கலசம் ஏற்பாடு செய்து, அங்கு 'ஸ்ரீ' என்னும் சிலந்தி, 'காள' என்னும் பாம்பு, 'ஹஸ்தி' என்னும் யானை உருவச்சிலைகள், பரத்வாஜ் முனிவர் சிலையை வைத்து பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மற்றும் பிற சன்னதிகளில் பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பவித்ரோற்சவத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.வின் மனைவி, மகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பவித்ரோற்சவம் 29-ந்தேதி வரை நடக்கிறது.

பவித்ரோற்சவ நாட்களில் மூன்று கால அபிஷேகங்கள், மாலை 6 மணிக்கு நடக்கும் பிரதோஷ தீபாராதனை ஆகியவை கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகின்றன. பக்தர்களுக்கு தீபாராதனை டிக்கெட்டுகள், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி.களுக்கும், பிரமுகர்களுக்கும் பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட மாட்டாது. கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com