செல்வம் தரும் முளைப்பாரி ஊர்வலம்

முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி. அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் சேர்ப்பர்.
செல்வம் தரும் முளைப்பாரி ஊர்வலம்
Published on

அன்னை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி. அதனால்தான் ஏராளமான கோவில்களில் முளைப்பாரி நேமிசம் நடைபெறும். 8 நாள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சுத்தமாக இருந்து அன்னை முத்தாரம்மனின் திருநாமத்தை மனதில் நிலை நிறுத்தி, அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் கொண்டு சேர்க்கின்றனர்.

பயிறு விதை போட்டவர்கள் பல நூறு கோடி பயன்பெறவும்

எள்ளு விதை போட்டவர்கள் என்னாளும் வாழ்ந்திடவும்

கானம் விதை போட்டவர்கள் கஷ்டங்கள் விலகிடவும்

கடலை அவரை விதை போட்டவர்கள் அன்னை முத்தாரம்மனை நினைத்திடவும்

என்று நவதானியத்திற்கு உரிய பாடல்களை பாடி அம்மனை நோக்கி ஆலயத்திற்கு வந்து அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com