அன்னை முத்தாரம்மன் பெயர் காரணம்

பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்மை நோயினை முத்துப்போட்டதாக கூறுவது மரபு.
அன்னை முத்தாரம்மன்  பெயர் காரணம்
Published on

பாண்டி நாடு முத்துடைத்து என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளில் இருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து. பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள்.

கிராமங்களில் அம்மை நோயினை முத்துப்போட்டதாக கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் எனஅழைக்கப்படுகிறாள்.இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com