புதுமணத்தம்பதிகள் வழிபடும் கோவில்

பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.
புதுமணத்தம்பதிகள் வழிபடும் கோவில்
Published on

புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். ஆம்! பெண்ணாசையால் சாபம் அடைந்து விமோசனம் பெற்ற இந்திரனும், கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி வாழ்ந்த கற்பரசி அனுசுயாவும், பித்தனை நினைத்து மனம் பித்தாகி முடிவில் பிறை சூடிய பெருமானோடு சேர்ந்த அறம் வளர்த்த நாயகி போன்ற பெண்மணிகளின் தெய்வீக திருப்பாதங்கள் பட்ட இந்த திருத்தலத்தில் பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும் என்பதின் அடையாளமாக மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.

அதிலும் பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். சுசீந்திரம் தேர் திருவிழாவுக்கு புத்தாடை உடுத்தி புது மணத்தம்பதிகள் வருவது நமது மனதை விட்டு அகலாத காட்சியாகும்.

செண்பகராமன் மண்டபத்தில் ராமாயண காட்சிகள்

இந்தியாவின் இதிகாசங்களில் முக்கியமானது ராமாயணம். ராமா என்றால் ராமன் என்றும் யணம் என்பதற்கு வரலாறு என்றும் பொருள் ஆகும். இன்றும் ராமாயணம் இந்திய மக்களின் வாழ்வில் மிகவும் ஆழமான தாக்கம் செலுத்துகிறது.

இதனால் பல கோவில்களில் ராமாயணம் ஓவியங்களாக தீட்டப்பட்டு உள்ளது. சுசீந்திரம் கோவில் மண்டபங்களில் செண்பகராமன் மண்டபம் மிகவும் பெரியது. இந்த மண்டப சுவர்களில் ராமாயண காட்சிகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com