ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனை.சாஸ்திரப்படி 100 ருத்விக்குகளுடன் அர்ச்சனை
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தொடங்கியது.

சாஸ்திரப்படி 100 ருத்விக்குகளுடன் அர்ச்சனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரிசுவாமி கூறியதாவது:-

உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு கோடி குங்குமார்ச்சனையும் செய்யப்பட்டது. தெலுங்கு கார்த்திகை மாதத்தில் வில்வ இலையை சமர்ப்பித்து பரமேஸ்வரரை வழிபட்டால் கோடி பிறவிகளின் பலன் அடைந்து, முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உலக நன்மைக்காக வாயு லிங்கேஸ்வரருக்கு கோடி வில்வ இலைகளால் அர்ச்சனை மற்றும் பூஜைகள் சாஸ்திரப்படி தொடங்கி நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் முக்கிய அர்ச்சகர்கள், வேதபண்டிதர்களான அர்த்தகிரி, மாருதிசர்மா, ருத்விக்குகள் அர்ச்சனைக்கு தீட்சை எடுத்தனர்.முதலில் கலச ஸ்தாபன பூஜை செய்து, அதன் பிறகு வேத பண்டிதர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு கோடி வில்வார்ச்சனையும், அம்பாளுக்கு கோடி குங்குமார்ச்சனையும் நடத்தினர்.

கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தினமும் 2 காலங்களில் நடத்தப்படுகிறது. கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி வரை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தம்பதியினர், நிர்வாக அதிகாரி சாகர்பாபு தம்பதியினர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com