கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவிழா: திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மண்டகப்படி

வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவிழா: திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மண்டகப்படி
Published on

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

4-ம் திருவிழாவான நேற்று முன்தினம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பாக மண்டகப்படி நடைபெற்றது. இதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள காமதேனு வாகனம் கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள திருவாவடுதுறை கிளை மடத்தில் பலவகையான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து தேங்காய் மற்றும் பழவகைகள், இனிப்புகள் படைக்கப்பட்டது.

பின்னர் பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுசீந்திரம் திருவாவடுதுறை கிளை மட ஆய்வாளர் வீர நாதன் மற்றும் மட அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com