முதல் பித்ரு வழிபாடு எப்போது நடந்தது தெரியுமா...?

தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர்.வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார்.
முதல் பித்ரு வழிபாடு எப்போது நடந்தது தெரியுமா...?
Published on

தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர் என்று மகாபாரதம் கூறுகிறது. இதை -நாராயணர், நாரதருக்குச் சொல்வதாக வருகிறது.

வராக அவதாரத்தில் பூமியைக் கடலில் இருந்து வெளியே கொண்டு வந்த போது, மத்தியானம் வந்து விட்டது. மத்தியா நிஹம் செய்ய வேண்டி வராகர் ஆயத்தம் செய்த போது, தெற்றுப்பல்லில் கொஞ்சம் மண் ஓட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். தலையை ஆட்டி அவர் உதறின போது அவை மூன்று உருண்டையாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன. அவையே மூன்று தலைமுறை பித்ருக்களாக ஆகினர்.

அவர்களுக்கு வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார். பித்ரு காரியத்தை ஸ்தாபித்தவரும் அவர்தான். அதை நடத்தி உலகக்கு வழி காட்டியரும் அவர்தான். சரீரம் இல்லாதவர்களுக்குப் பிண்டம் தர வேண்டும் என்றும், பித்ருக்களுக்குத் தருவது தன்னையே அடைகிறது என்றும் வராகர் எடுத்துரைத்தார்.

பூமி எங்கிலும் நீர் நிறைந்திருந்த போது, நிலப்பகுதிகளை வெளியே கொண்டு வந்த அந்த இறை சக்தி, வராகம் எனப்பட்டது. குகை போன்ற பூமிக்குள் நுழைந்து, அதை வெளியே கொண்டு வந்ததால் அந்த தெய்வம் கோவிந்தன் எனப்பட்டது.

கோ என்றால் பூமி, அவிந்தம் என்றால் அதை அடைந்து வெளிக்கொணருதல் என்று பொருள். கோவிந்தா என்றால் இருளாகிய குகையில் இருந்து, நம்மை வெளிக் கொண்டு வருபவன் என்று பொருள். பூமியை வெளியே கொண்டு வந்தவுடன் உலகத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தர்மத்தை உபதேசிக்கவே அவர் வ்ரிஷாகபி எனப்படுகிறார். அவர் சொன்ன முக்கிய போதனை தர்மம் பித்ருகாரியம் செய்ய வேண்டும் என்பதே.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com