

இன்றைய பஞ்சாங்கம்
பராபவ ஆண்டு, ஆடி-29 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை இரவு 9.24 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : மகம் காலை 7.21 வரை பிறகு பூரம்
யோகம் : மரண / சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திர தரிசனம். திருவாடிப்பூரம். ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திர வைபவம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பெருந்திருவிழா. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கோவை கந்தே கவுண்டர்சாவடி மாகாளியம்மன் தேரோட்டம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - மாற்றம்
ரிஷபம் - நிம்மதி
மிதுனம் - உயர்வு
கடகம் - உயர்வு
சிம்மம் - சிறப்பு
கன்னி - புகழ்
துலாம் - ஊக்கம்
விருச்சிகம் - உதவி
தனுசு - நட்பு
மகரம் - பெருமை
கும்பம் - ஆக்கம்
மீனம் - போட்டி