

பராபவ ஆண்டு, ஆடி-28 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை இரவு 10.38 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : ஆயில்யம் காலை 8.06 வரை பிறகு மகம்
யோகம் : சித்த / அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நாகபட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் கண்ணாடி பல்லக்கில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கு, ஸ்ரீ ரெங்கமன்னார் குதிரை வாகனத்தில் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருவீதியுலா. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச்சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு, திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
மேஷம் - செலவு
ரிஷபம் - நன்மை
மிதுனம் - வரவு
கடகம் - நலம்
சிம்மம் - லாபம்
கன்னி - போட்டி
துலாம் - விவேகம்
விருச்சிகம் - ஆசை
தனுசு - பொறுமை
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - வெற்றி
மீனம் - இன்பம்