

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு சுதர்சன ஹோமம் நடைபெற்றது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
இதில் அனைத்து விதமான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.