சிவராத்திரி தினத்தன்று நாட்டியாஞ்சலி

சிவ என்ற சொல்லுக்கு சிவந்த ஒளி என்று பொருள். சிவபெருமானை காலையில் தரிசித்தால் பிணிகள் நீங்கும்.
சிவராத்திரி தினத்தன்று நாட்டியாஞ்சலி
Published on

சிவ என்ற சொல்லுக்கு சிவந்த ஒளி என்று பொருள்.

சிவராத்திரி அன்று சிவனைத் துதிப்பவர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மல இருளும் நீங்கி, பேரானந்தம் என்னும் அருட்பேரொளி பெற முடியும்.

மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அர்த்த ராத்திரியே மகா சிவராத்திரி தினமாகும்.

அன்று இரவு பதினான்கு நாழிகையின்போது முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பாவங்கள் விலகும்.

சிவராத்திரி தினத்தன்று நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை வழிபட வேண்டும்.

வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

நான்கு காலங்களிலும் கருவறையில் உள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும்.

சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள்.

சிவனுக்குரிய மலர்களான தாமரை, கொன்றை, ஆத்தி, மல்லிகை, ரோஜா, வில்வம், தர்ப்பை, அருகம்புல், கருவூமத்தை, துளசி போன்றவைகளைக் கொண்டு சிவமந்திரங்களை உச்சரித்தபடியே அர்ச்சனை செய்ய வேண்டும்.

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி பூஜையை மிக, மிக விமரிசையாக நடத்தி வருகிறார்கள்.

சிவராத்திரி தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் திரண்டு சிவராத்திரி விரதம் மேற்கொள்வார்கள்.

இதையொட்டி பக்தர்களுக்காக ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்குள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்துவார்கள்.

சிவபெருமானை காலையில் தரிசித்தால் பிணிகள் நீங்கும். நண்பகல் தரிசனம் செய்தால் செல்வம் பெருகும்.

மாலையில் தரிசனம் செய்தால் பாவம் போகும். அர்த்த சாமத்தில் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com