கோதானம் செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை:

கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும். நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.
கோதானம் செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
Published on

*கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.

*நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.

*தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது மிகவும் சிறந்தது.

*கறவையுள்ள பசுவைத் தானம் கொடுப்பதே முறை.

*தாயையும்,பால் அருந்தும் கன்றையும் பிரித்து தானம் அளிக்க கூடாது.

*பசுவோடு காளையையும் சேர்த்து தானம் செய்வது மேன்மையாகும்.

*பால் கறப்பதற்கான பாத்திரமும் சேர்த்து கொடுத்தல் வேண்டும்.

*பசுவைத் தானம் செய்யும் போது, குறைந்தது ஒரு வருட உண விற்கும் பராமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகை செய்வது இன்னும் மேன்மை தரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com