கல்வெட்டுகள்

கி.பி.1068--ல் வீர ராஜேந்திரன் வரிவிலக்களித்து அமுதுபடைக்க நெல் வழங்கி உள்ளான். விக்கிரமச்சோழன் காலத்தில் விளக்கெரிப்பதற்காக கொடைகள் வழங்கியுள்ளான்.
கல்வெட்டுகள்
Published on

கி.பி.630-ம் ஆண்டில் நரசிம்ம பல்லவனால் நிர்மாணிக்கப்பட்ட இத்திருக்கோவிலில் 29 கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் ராஜேந்திரன் கி.பி.1015-ல் இத் திருக்கோவிலைப் புதுப்பித்து விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.

கி.பி.1068--ல் வீர ராஜேந்திரன் வரிவிலக்களித்து அமுதுபடைக்க நெல் வழங்கி உள்ளான்.

கி.பி.1073 -ல் முதலாம் குலோத்துங்க சோழன் பல கிராமங்களை ஒருங்கிணைத்து "சாத்தனூர்" எனப் பெயரிட்டு வழிபாட்டிற்கு தானமாக வழங்கியுள்ளான்.

மேலும் இம் மன்னன் கி.பி. 1075-ம் ஆண்டில் திருக்கோவிலை புனரமைத்து மண்டபம் நிர்மாணம் செய்தான்.

மேலும் குலோத்துங்க சோழீஸ்வரர் திருவுருவச் சிலையை அமைத்து பூஜைகள் நடத்த நிவந்தங்கள் அளித்துள்ளான்.

விக்கிரமச்சோழன் காலத்தில் விளக்கெரிப்பதற்காக கொடைகள் வழங்கியுள்ளான்.

இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் கி.பி.1168-ல் வரிகளை மாற்றம் செய்து வழிபாடு தொடர ஆணையிட்டுள்ளான்.

மூன்றாம் குலோத்துங்கனுடன் இணைந்து பாண்டியரை வென்ற அம்மையப்பன் கி.பி.1190-ல் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலுக்கு ஆபரணங்கள் செய்து அளித்துள்ளான்.

கி.பி.1193-ல் ஆட்கொண்ட சேடிராயன் என்பவர் திருமேனி களை அமைத்து வழிபாட்டுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளான்.

மூன்றாம் ராஜராஜன் கி.பி.1219-ல் வழிபாடு தொடர தானம் வழங்கியுள்ளான்.

பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் விக்ரம பாண்டியன், வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர் கி.பி.1260 முதல் கி.பி. 1313 வரை பல நிவந்தங்களை அளித்து திருக்கோவிலில் வழிபாடுகள் தடையின்றி நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

"இராஜநாராயண சம்புவராயன்" 3.7.1356 அன்று இத்திருக்கோவி லுக்கு உற்சவம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

விஜய நகர வேந்தன் "கம்பண்ணன்" கி.பி.1361-ல் காஞ்சி சங்கர மடத்திற்கு தானமளித்துள்ளதை இத்தலத்து கல்வெட்டுகளில் குறித்துள்ளார்.

வீரபுக்கன் கி.பி.1376-ல் வழிபாடு தொடர நிலம் வழங்கியுள்ளான்.

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் சிறந்த ஆட்சிக்காக கி.பி.1528-ல் சிறப்பு வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட விபரம் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com