பொள்ளாச்சியில் மூதாட்டியின் பணப்பையை திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு

பொள்ளாச்சியில் மூதாட்டியின் பணப்பையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியில் மூதாட்டியின் பணப்பையை திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சியை அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி பிரேமலதா (வயது 60).

இவர் பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னல் சந்திப்பில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.19 ஆயிரம் பணத்தை செலுத்த வந்தார்.திடீரென செல்போனில் அழைப்பு வந்ததால், பணம் பையை கீழே வைத்து விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடினார். இதனை பார்த்த பிரேமலதா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். உடனே பொதுமக்கள் விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் அருண்குமார் (21), என்பதும், பி.எஸ்சி. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இவர் படித்து முடித்து வேலை கிடைக்காததால், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com