நிலவில் மோதி பள்ளத்தை ஏற்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - புகைப்படங்களை வெளியிட்ட நாசா

ஃபால்கன் 9 ராக்கெட் நிலவின் மேற்பரப்பில் உருவாக்கிய 60 அடி அகல பள்ளத்தின் தெளிவான படங்களை நாசா வெளியிட்டது.
SpaceX Rocket Impact Crater
நிலவு மோதல் பள்ளம்
Published on

பூமியில் இருந்து நிலவுக்கு செலுத்தப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட், நிலவின் மேற்பரப்பில் மோதி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் பள்ளம்

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக தனியார் திட்டமான ஃபால்கன் 9 ராக்கெட் 2025 ஜனவரி மாதத்தில் ஏவப்பட்டது. இது ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸை சேர்ந்த ப்ளூ கோஸ்ட் 1 நிலவு லேண்டரை சுமந்துகொண்டு நிலவுக்கு சென்றது.

இதையடுத்து இந்த மாதம் 5 அன்று ஸ்பேஸெக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் நிலவின் மேற்பரப்பில் எதிர்பாரா விதமாக மோதியது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லூனார் செகனைசஸ் ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை படம் பிடித்தது.

இந்த புகைப்படங்கள் நிலவின் மேற்பரப்பில் 60 அடி (18 மீட்டர்) அகலம் மற்றும் 10 அடிக்கும் குறைவான ஆழத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

கொரிய விண்வெளி நிறுவனம்

நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான புகைப்படங்கள் முன்னதாகவே டானூரி என்று அழைக்கப்படும் கொரியா பாத்ஃபைண்டர் லூனார் ஆர்பிட்டர் (KPLO) எடுத்த படங்களை, கொரிய விண்வெளி நிறுவனம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிட்டது.

2009 முதல் சேவையில் உள்ள LRO, சந்திரன் தனக்குக் கீழே சுழலும்போது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை சந்திரனை துருவத்திலிருந்து துருவத்திற்கு சுற்றி வருகிறது.

நாசா அறிக்கை

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், “அந்த படத்தை பிடிப்பது சவாலாக இருந்தது. நிலவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைப் புகைப்படம் எடுக்க, அந்த இடம் பார்வைக்குத் தெரியும் வரை விண்கலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிகழ்விற்காக ஆறு நாட்கள் ஆனது.

மேலும், விண்கலம் 60 மைல் உயரத்திற்கு மேலே கடந்து செல்லும்போது, அதன் கேமரா பள்ளத்தை நோக்கியவாறு இருக்குமாறு மிகச் சரியாகச் சாய்க்கப்பட வேண்டியிருந்தது.

மற்றொரு சவாலாக நேரம் தான் இருந்தது. கேமரா 10 வினாடிகள் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ படம் எடுத்தால்கூட, இலக்கு மையத்திலிருந்து 10 மைல்கள் விலகிச் சென்றுவிடும்.

மேற்பரப்பிலிருந்து 1.5 அடி ஆழத்தில் ஏற்பட்ட மோதலின்போது, சூரியக் காற்று, விண்மீன் மண்டல அண்ட கதிர்கள் மற்றும் நுண் விண்கல் மோதல்களால் நீண்ட காலமாக உருமாற்றம் அடைந்த மேற்பரப்புத் தூசி மற்றும் பாறைகளால் அந்த கருமையான கோடுகள் உருவாகியுள்ளன.

எரிமலையின் பள்ளம் இருந்த இடத்தைக் கண்டறிவது, முன்னணி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் ஒன்றிணைத்த ஒரு உலகளாவிய முயற்சியாக இருந்தது.

நாசாவின் புவிக்கு அருகிலுள்ள விண்வெளிப் பொருட்கள் ஆய்வு மையம், மோதல் நிகழ்ந்த இடத்தைக் கண்டறியும் வரை அதன் பயணப்பாதையை படிப்படியாக செம்மைப்படுத்தி, பின்னர் அந்த தகவலை கொரியாவுக்கு வழங்கியது.

பதிலுக்கு கொரியாவை சேர்ந்த டானூரி குழுவினர் தங்களின் தொடர் படமெடுக்கும் வரிசையை செம்மைப்படுத்த உதவும் வகையில், தங்களின் ஆட்களை நாசாவின் LRO குழுவிற்கு அனுப்பினர்,” என்று நாசா தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com