நேபாள வெள்ளம்: 359 பேர் பலி... 30 நாடுகளை சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்டோர் மாயம்

இதுவரை 50 வெளிநாட்டினர் வான்வழியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
Nepal Floods
Published on

சீனா மற்றும் நேபாள எல்லை பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 359 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் மலையேற்றம், வழிகாட்டப்பட்ட சுற்றுலா அல்லது புனிதமான இந்து தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ள அங்கு சென்றிருந்த வெளிநாட்டினர் ஆவர்.

தரவு சேகரிப்பு முறை, தகவல் தெரிவிக்கப்பட்ட நேரம் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளில் உள்ள வேறுபாடுகள், அத்துடன் தரவு சேகரிப்பவர்களுக்கும் மீட்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குறைபாடுகள் ஆகியவற்றால், புதன்கிழமை நிகழ்ந்த இந்த பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் பல்வேறு அமைப்புகளுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படலாம்.

288 இந்தியர்கள் மாயம்:

நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359-ஆக உயர்ந்துள்ளது; 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 910 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இதுவரை 50 வெளிநாட்டினர் வான்வழியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களில் 113 நேபாள சுற்றுலா பயணிகள், ராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 85 பாதுகாப்பு பணியாளர்கள். இத்துடன் ரசுவா மாவட்டத்தை சேர்ந்த 161 பேர் மற்றும் நுவாகோட் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஆகியோர் அடங்குவர் என்று தேசிய அவசர கால செயல்பாட்டு மையம் தெரிவித்ததாக உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன.

நேபாள வெள்ள பாதிப்புக்கு பிறகு 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மின்சக்தித் திட்டம் ஒன்றில் பணியாற்றி வந்த 73 பேரும் அடங்குவர். இந்துக்களின் புனித தலமான திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு பல இந்தியச் சுற்றுலா பயணிகள் யாத்திரை மேற்கொண்டிருந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

558 பேர் மாயம்:

திபெத்தின் கியிரோங் கவுண்டியில் குறைந்தது மூவர் உயிரிழந்ததாகவும், 558 பேர் காணாமல் போனதாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போன 558 பேரில் 260 பேர் வெளிநாட்டினர் என்று சீன அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. இது தவிர, நேபாள பகுதியில் சுமார் 100 சீன குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் நேபாளத்தில் 90 அமெரிக்கர்கள் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மூன்று அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் 51 மலேசியர்கள், 55 உக்ரைனியர்கள், 39 ஆஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக அந்த வாரியம் தெரிவித்தது.

இதுதவிர காணாமல் போனவர்களில் 33 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் 25 பேர் கனடாவை சேர்ந்தவர்கள் என்று அந்த வாரியம் தெரிவித்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com