தீவிர காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறும் பாகிஸ்தான்.. கட்டாய 'லாக்டவுன்' அமல்

நவம்பர் 17ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மோசமான காற்றின் தரம் காரணமாக தொண்டை வலி ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தீவிர காற்று  மாசுபாட்டால் மூச்சுத் திணறும் பாகிஸ்தான்.. கட்டாய 'லாக்டவுன்' அமல்
Published on

வட இந்தியாவிலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகை மூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது. இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் கடுமையான அளவில் மோசமடைந்ததால் காற்றின் மாசு அளவைக் குறைக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனவே நவம்பர் 17ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்வேறு நகரங்களில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான காற்றின் தரம் காரணமாக தொண்டை வலி ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மமேலும் லாகூர் உலகின் மிகுவும் மாசுபட்ட நகரமாக மாறி உள்ளது.

ஒரு கன மீட்டருக்கு ஐந்து மைக்ரோகிராம்களுக்கு மேல் உள்ள எதையும் அபாயகரமானது என்று உலக சுகாதர அமைப்பு வரையறுக்கிறது. ஆனால் இங்குள்ள நகரங்களில் காற்றில் கலந்துள்ள நுண்துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 947 மைக்ரோகிராம்கள் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு அபாயம் என்று வரையறுத்ததை விட 189.4 மடங்கு அதிகமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com