கடற்பரப்பை நோக்கி Projectile ஏவிய வட கொரியா

அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டு பதிலடித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.
Projectile
Published on

வட கொரியா தனது சமீபத்திய ஆயுதப் பிரயோகத்தின் ஒரு பகுதியாக, அடையாளம் தெரியாத பொருளைக் கடலை நோக்கி ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுதல் இன்று (சனிக்கிழமை) காலை வட கொரியாவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் நிகழ்ந்ததாக தென் கொரிய ராணுவம் கூறியது, ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களை அளிக்கவில்லை.

ஐந்தாண்டு ராணுவ பயிற்சி:

வட கொரியா ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதும் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களது ஐந்தாண்டு ராணுவ பயிற்சியை முடித்த ஒரு நாள் கழித்து இந்த ஏவுதல் நிகழ்ந்துள்ளது.

'ஃப்ரீடம் எட்ஜ்' பயிற்சி தற்காப்புத் தன்மையுடையது என்றும், வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டு பதிலடித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது என்றும் தென் கொரிய இராணுவம் கூறியது.

திங்களன்று பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு, வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கிம் சோங் கி, இந்தப் பயிற்சியை விமர்சித்ததுடன், "சக்தியின் அடிப்படையில் வலுவான மற்றும் ஆழ்ந்து சிந்திக்கும் எதிர் நடவடிக்கைகளை" எடுக்கும் திறன் வட கொரியாவிற்கு உள்ளது என்றும் எச்சரித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com