கொரோனா தொற்று.. சிகிச்சைக்கு மத்தியிலும் பணிகளை தொடரும் அதிபர் ஜோ பைடன்

ஜோ டைபனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.இருப்பினும் அவருக்கு உடல் தளர்வு, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளது.
கொரோனா தொற்று.. சிகிச்சைக்கு மத்தியிலும் பணிகளை தொடரும் அதிபர் ஜோ பைடன்
Published on

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிபர் ஜோ டைபனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், ஜோ பைடன் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிபருக்கான கடமைகளை தொடர்கிறார் என்று வெள்ளை மாளிகை மருத்துவர் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பைடன், கொரோனாவுக்கான 6-வது டோஸ் கோவிட் எதிர்ப்பு மாத்திரையை உட்கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு உடல் தளர்வு, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளது. அவரது நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச விகிதம் மற்றும் வெப்பநிலை அனைத்தும் சாதாரண வரம்புகளுக்குள் உள்ளது என்று மருத்துவர் கெவின் சி ஓ கானர் கூறினார்.

முன்னதாக அதிபர் பைடன் அளித்த ஒரு பேட்டியில், தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com