என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானி கொலை
    X

    இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானி கொலை

    • ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது.

    இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபர் கொல்லப்பட்டார்.

    போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு, வடக்கு ஈரானின் அஸ்தானா அஷ்ரஃபியாவில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது 17 வயது மகன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×