இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளை

ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Paintings stolen in Italian museum
Published on

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து 4 ஓவியங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட் டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com